இவ்வூர் மக்கள் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். [[மீன்பிடித்தொழில்]] இங்கு முக்கியமான ஒன்றாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் [[கயிறு]] திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504 | title=கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம் | date=11-02-2015 | agency=தினகரன் | accessdate=6 ஆகத்து 2015}}</ref>. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு [[தேங்காய்]] ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு [[மல்லிகை]]ப்பூச்செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தலும் முக்கியமான தொழிலாக உள்ளது. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.