கிழக்கத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
1845ல் கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனம் (EIR) தில்லியையும் கிழக்கு இந்தியாவையும் இணைக்க ஒருங்கிணைக்கப்பட்டது. 15 ஆகத்து 1854ல் முதல் தொடருந்து ஹவுரா மற்றும் ஹூக்லியில் இடையே இயக்கப்பட்டன. முதல் ரயில் 08:30 மணிக்கு ஹவுரா தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 91 நிமிடங்களுக்குப் பிறகு ஹூக்ளியை அடைந்தது. 1 ஜனவரி 1925 அன்று பிரிட்டிஷ் இந்திய அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிர்வாகத்தினை கையகப்படுத்தியது.<ref>Rao, M.A. (1988). ''Indian Railways'', New Delhi: National Book Trust, pp.13,34</ref>
14 ஏப்ரல் 1952ல் கிழக்கத்திய தொடருந்து மண்டலமானது, முந்தைய கிழக்கு இந்தியன் இரயில்வேயின் பிரிவுகளான ஹவுரா, ஆசன்சோல் மற்றும் தானாபூர் மேலும் பெங்கால் நாக்பூர் இரயில்வே முழுவதும்(BNR) மற்றும் முந்தைய பெங்கால் அசாம் இரயில்வேயின் பிரிவான சீல்டா கோட்டம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.
1 ஆகத்து 1955ல், பெங்கால் நாக்பூர் இரயில்வேயின்(BNR) தெற்கிலுள்ள ஒரு பகுதிகளான ஹவுரா முதல் விசாகப்பட்டினம் வரை, மத்தியப் பகுதிகளான ஹவுரா முதல் நாக்பூர் வரை மேலும் வடமத்திய பகுதியிலுள்ள கத்னி வரைக்கும் தனியே பிரிக்கப்பட்டு [[தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)]] உருவாக்கப்பட்டது.<ref>Rao, M.A. (1988). ''Indian Railways'', New Delhi: National Book Trust, pp.42–3</ref><ref name=er>{{cite web |url=https://www.easternrailway.gov.in/erweb_new/about_us/aboutus.asp|title=The Eastern Railway-About us|publisher=The Eastern Railway}}</ref> பின்னர் தான்பாத், முகல்சராய் மற்றும் மால்தா ஆகிய மூன்று கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web|url=http://pib.nic.in/focus/fojul99/fo2407991.html|title=Focus-Eastern Railway|publisher=Press Information Bureau, Government of India}}</ref>
|