ரிபு கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
ரிபுவின் சீடர் நிதாகர். நிதாகருக்கு உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு வரவில்லை. ரிபு சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பார். ஒரு முறை ஞானி நிதாகரை சோதிக்க என்னி அவர் இருக்கும் ஊருக்கு ரிபு வேற்றுருவில் சென்றார். அப்போது அவ்வூர் அரசன் ஓரு பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அப்போது நிதாகர் பசி மயக்கத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து நிதாகரைப் பார்த்து "ஏன் இங்கு நிற்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு நிதாகரோ அவரிடம் "அரசன் நகர் வலம் வருகிறார். கூட்டமாக இருக்கும் காரணத்திணால் ஒதுங்கி இருக்கிறேன்" என்றார்.அதைக் கேட்ட ரிபு "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்?" என வினவினார். நிதாகர் அவரைப் பார்த்து "
நிதாகர் இப்போதும், "ஐயா! கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பவன் அரசன். வாஹனமாயிருப்பது யானை. வஹிக்கப்படுகிறவனரசன். இது உமக்கு ஏன் புரியவில்லை. இதையறியாதார் ஒருவரும் இருக்க மாட்டார்களே" என்றார். ருபு "கீழ், மேல் என்றால் என்ன. அதை விளக்கும்" என்றார். வந்ததே கோபம் நிதாகருக்கு. கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்டார் நிதாகர்!! அரசன் யானை மீதிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழேயிருப்பது யானை, இங்கு நீர். மேலேயிருப்பது அங்கு அரசன். இங்கு நான். நானும், அரசனுமிருக்குமிடம் மேல், நீங்களும், அந்த யானையும் இருக்குமிடம் கீழ். புரிகிறதா இப்போது.
|