[[Image:LTTE Black Tiger Picture Gallery 2004.jpg|thumb|300px|கரும்புலிகளின் படத்தொகுப்பு, இடது பக்க மேல் மூலையில் இருப்பது கொலின், முதல் கடற்கரும்புலித் தற்கொலை போராளி]]
'''கரும்புலிகள்''', [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். [[1987]] [[ஜூலை 5]] முதல் [[2007]] [[ஜூன் 27]] வரை 322 கரும்புலிகள் [[கடல்|கடலி]]லும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.<ref>[http://www.eelampage.com/?cn=32446 புதினம்]</ref>. பெரும்பாலானோர் [[இலங்கை]]யில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா]] கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.
முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை [[1987]] யூலை மாதம், 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான [[கரும்புலி]] [[கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதலாக நடத்தினார். கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து [[ஒப்ரேசன் லிபரேசன்]] எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.
கப்டன் மில்லர் ([[ஜனவரி 1]], [[1966]] - [[ஜூலை 5]], [[1987]]; [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயர் கொண்ட '''வல்லிபுரம் வசந்தன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.