ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 38:
== மராட்டியரும் இராசபுத்திரரும் ==
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது.
சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த [[செஞ்சி]] கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.
== தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு ==
தென்[[இந்தியா|தென்னிந்தியா]]வின் நிலப்பகுதிகளை [[தக்காண பீடபூமி]] என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் [[விந்திய மலைத்தொடர்]]களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தார்.[[1698]]-[[பிப்ரவரி]] 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, ''சூல்பிகார் கான்'' தமிழகத்தின் [[செஞ்சி]]யை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (''நவாப்'') ஆக்கினார். வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக [[ஐதராபாத்]] என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், [[அதிபர்|அதிபராக]](''நிஜாம்=நிசாம்'') இருந்து ஆட்சி செய்தவர்களே, [[ஐதராபாத் நிசாம்கள்]] என அழைக்கப் பட்டனர். செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய [[தமிழகம்]], [[ஆந்திரம்]], [[கர்நாடகம்|கன்னட]] மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் ''கர்நாடக நவாபு'' என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், [[1710]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]], ஆளுநராக (''நவாப்'') வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, [[ஆற்காடு|ஆற்காட்டை]] தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, [[ஆற்காடு நவாப்|ஆற்காட்டு நவாபு]] என அழைக்கப்பட்டார்.
|