முதலாம் ஹரிஹரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைத் திருத்தம்
சி மேற்கோள் இல்லை...
வரிசை 1:
{{Unreferenced}}
{{விஜயநகரப் பேரரசு}}
'''முதலாம் ஹரிஹரர்''' (கி.பி. 1336-1356) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] நிறுவியவர் ஆவார். ஹக்கா, வீர ஹரிஹரர் போன்ற பெயர்களாலும் அறியப்படும் இவர் [[குறும்பர்]] (Kuruba) [[இனக்குழு]]வைச் சேந்தவரும், சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். [[சங்கம மரபு]], விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் [[கோட்டை]] ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் [[மூன்றாம் வீர வல்லாளன்|மூன்றாவது வீர பல்லாலனின்]] மறைவைத் தொடர்ந்து [[போசளப் பேரரசு|ஹொய்சாலம்]] முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஹரிஹரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது