பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 158:
'''பன்னிரு நிலங்களும் வட்டார மொழிகளும்'''
 
வணக்கம், தங்களின் கேள்வியே குழப்பமானதாக இருக்கின்றது, இருந்தாலும் எனக்குத் தெரிந்தவைகளைக் கூறுகின்றேன். இதை ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம். மேற்கூறியவற்றில் சில உரைதிருத்தங்களைச் செய்திருக்கின்றேன். சரி, தங்களின் கேள்விக்குப் போவோம். செந்தமிழ் சேர் நிலம் 12 எனத் தொல்காப்பியர் கூறியதும், 17 நிலங்கள் எனப் பவணந்தியார் கூறியதும் வெவ்வேறானவை. இதை முதலில் சேர்த்து நோக்குவதைத் தவிர்க்கவும். செந்தமிழ் சேர் 12 நிலங்கள் என்பவை, செந்தமிழ் மொழி பேசப்படும் நாட்டினைச் சேர்ந்த 12 நிலங்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த 12 நிலங்களில் சோனகம், சாவகம் எல்லாம் வராது. இந்த 12 நிலங்கள் தமிழகத்தின் 12 வட்டாரங்களைக் குறிப்பன. '''“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”''' எனத் தொல்காப்பியர் கூறியதிலிருந்து தொல்காப்பியர் காலமான கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் 12 வட்டாரங்கள் இருந்ததை நம்மால் அறிய முடிகின்றது. இந்த 12 வட்டாரங்கள் எவை என்பதை நச்சினார்க்கினயர் உரை, சேனாவரையர் உரை மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அது மட்டுமின்றி இவர்கள் 12 வட்டாரங்களில் காணப்படும் சொற்களையும் எடுத்துக் காட்டியும் உள்ளனர். இந்த 12 நிலங்கள் என்று தானே சொல்லியிருக்கின்றார்? 12 மொழிகள் என எப்படி எடுத்துக் கொள்வது என்ற கேள்வியே சற்றே சிறுபிள்ளைத் தனமானது, பள்ளி மாணவர்களுக்கே இதற்கான விடை தெரியும். இருந்தாலும், சொல்கின்றேன் கேளுங்கள். இந்த உரைகளில் 12 நிலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு நிலத்தின் வட்டார மொழிக்கு ஒரு சொல்லை எடுத்துக் காட்டாகக் காட்டி எழுதியுள்ளனர். இதன் மூலம் '''ஒரு வட்டாரத்துக்கு ஒரு வட்டார மொழி என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்'''. ஒன்றிற்கும் மேற்பட்ட கிளைமொழி ஒரு வட்டாரத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களை எடுத்துக் கூறி, அந்த வட்டார மொழியினைப் பற்றியும் விவரித்திருப்பார்கள். நமக்குக் கிடைத்திருக்கின்ற தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகளின் படி, தொல்காப்பியம் எழுதப்பட்டது கிமு 3-ஆம் நூற்றாண்டு. அக் காலக் கட்டத்தில் கிடைக்கின்ற அசோகர் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும் போது தமிழகத்தில் ஐந்து அரசாட்சிகளே இருந்திருக்கின்றனர் ( சேர, சோழ, பாண்டிய, அதியமான், தாமிரபரணி ). ஆனால், அதே காலக் கட்டத்தில் எழுந்த தொல்காப்பியமோ, 12 நிலங்களாகத் தமிழகத்தைப் பிரித்திருக்கின்றது. இந்த 12 நிலங்கள் என்பவை புவியியல் மற்றும் அரசியல் பகுப்புக்கள் கிடையாது. ஏனெனில் புவியியல் பகுப்பாகத் தொல்காப்பியம் ஐந்து திணைகளைக் கூறுகின்றது. அரசியல் பகுப்பாக அசோகர் கல்வெட்டு ஐந்து தமிழ் அரசாட்சியைக் கூறுகின்றது. தொல்காப்பியம் தரும் இந்த 12 நிலங்கள் என்பவை 12 வட்டார மொழிகளைப் பேசி வந்த 12 வட்டாரங்களையே குறிக்கின்றது. அது மட்டுமின்றி வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடிய பரம்பரனார் கூறியதிலிருந்து தமிழகத்தின் எல்லையானது வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே குமரி முனையும், இரண்டு பக்கமும் கடல் என்பதை நாமறியலாம். அத்தோடு இந்த 12 நிலங்களின் பெயர்களை உரையாசிரியர்கள் வழங்கியும் உள்ளனர். இந்த நாடுகள் எவை எவை என்பதைத் '''தொ.பெ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தெளிவாகவே தமது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்'''. 12 நிலங்களில் பேசப்பட்டு வந்தது 12 கிளைமொழிகள் தான் என்பதை வீரசோழியத்தின் உரையாசிரியர் பெருந்தேவனாரும் மற்றும் நன்னூலின் உரையாசிரியர் மயிலைநாதரும் தெளிவுபடுத்துகின்றனர். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 06:39, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
::
== பதினேழு நிலங்கள் பற்றியோ ==
 
நன்னூல் கூறும் 17 நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். நன்னூல் இயற்றப்பட்டது கிபி 12-ம் நூற்றாண்டு ஆகும். நன்னூலை இயற்றியது பவணந்தி முனிவர் கன்னட மரபைச் சேர்ந்த ஒரு சமணத் துறவி. அவரை ஆதரித்தவர் தென் கருநாடகத்தை ஆட்சி செய்து வந்த கங்கையரசன் ஆவார்கள். கங்கையரசர்களும் கன்னடர்களே. நன்னூலுக்கு உரை எழுதியது மயிலைநாதர் ஆவார். இவரது காலம் கிபி 13-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் தமிழ் மரபினர் என்ற போதும், இவரை ஆதரித்த மன்னன் சீயகங்கன் என்ற கன்னட கங்கையரசனே ஆவான். சரி, 17 நிலங்களைப் பற்றி நோக்கும்.
 
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என தமிழகத்தைச் சுற்றி அமைந்திருக்கும் 17 நிலங்கள் தாம் இவை என்கிறார் மயிலை நாதர். இதில் கொல்லம், தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் ஆகியவை தென்னிந்தியாவில் இருக்கின்ற பிற நிலங்கள் ஆகும். இவற்றில் முறையே தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் மொழிகள் என்பதை நாம் அறிவோம். இந்த மொழிகள் அதே பெயரால் அழைக்கப்பட்ட நிலங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நாடுகளை முறையே சோழர், பாண்டியர், போய்சளர், சாளுக்கியர், காக்காத்தியர் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர்.
 
கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என்ற வடநாட்டு நிலங்களில் அதே காலக் கட்டத்தில் பாலர், காளாசூரியர், கிழக்கு கங்கர்கள், சண்டாளர்கள், சேனர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர். அதனால், மயிலைநாதர் குறிப்பிடும் இந்த நிலங்கள் எல்லாம் மொழி பேசும் நிலங்கள் தான், அவை ஆட்சிப் பகுதிகளோ, நாடுகளோ கிடையாது.
 
அடுத்து அயல் நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். சிங்களம், சோனகம், சாவகம், சீனம், கடாரம் ஆகிய பிற நிலங்களையும் மயிலைநாதர் கூறுகின்றார். கிமு 12, 13-ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பாவில் ரோமப் பேரரசு ஆட்சி முடிவுற்று விட்டது. ரேமப் பேரரசின் கீழ் இருந்து வந்த கிரேக்கர்களின் வழித் தோன்றலாகிய பைசாந்திய பேரரசு மத்தியத் தரைக் கடல் பகுதியில் வாழ்ந்து வந்தது. அங்கு பல மொழிகள் பேசப்பட்டும் வந்தது. ஆனால், அரேபிய தீபகற்பத்தில் அரேபிய ஆட்சியாளும், எகிப்தில் பாத்திமை காலிபாக்களும் ஆட்சி செய்து வந்தனர். பாரசீகத்தில் செல்யூக சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். இக் காலக் கட்டத்தில் பைசாந்தியப் பேரரசு கிரேக்கம், துருக்கி, சிரியா, இராக் வரை மட்டுமே ஆட்சி செய்தனர். ஐரோப்பவின் பிற பாகங்களில் பல்வேறு அரசுகள் அப்போது தோன்றிவிட்டன. ஆக, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் சோனகம் என சேர்த்து பவணந்தி முனிவர் சொல்லியிருப்பாரா என்பது ஐயமே. அவ்வாறு சேர்த்து சொல்லுகின்ற வழக்கம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமில்லை, மற்று எங்குமே காணப்பட்டதில்லை, அதற்கான சான்றுகளும் இல்லை. இருந்தால் தாருங்கள், அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.
 
சோனகர் என்ற பெயர் யவனர் என்ற பெயரிலிருந்து வருவதாகவும், யவனர் எனும் பெயரை இறுதியாகப் பெற்றவர்கள் அறபிகளும் ஏனைய முஸ்லிம்களுமாவர் என ஐ.எல்.எம் அப்துல் அசீஸ் தமது இலங்கை சோனகரது வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். குறிப்பாக ஒன்பதாம் நூற்றாண்டின் பின் கிரேக்கர்கள், ரோமர்களது வணிக செயற்பாடுகள் அறவே நின்றுவிட்டன. அந்த இடத்தை அரபுகளே பெற்றனர். முன்பு கிரேக்க, ரோமர்களைக் குறித்த் யவனம் என்ற சொல் அரபுகள் பெற்றுக் கொண்டனர். யவனம் என்பதே பின்னர் சோனகம் ஆகியது. சோனகம் என பவணந்தி முனிவர் அரபு நாட்டையே சொல்லியிருக்கக் கூடும். யவனம் என்ற சொல் ஒரு காலத்தில் ரோமர், கிரேக்கர், பீனிசியர், அரபு என பலரையும் குறித்தது. ஆனால், சோனகர் சிறப்பாக அரபு மக்களையே குறித்தது என நிறுவுகின்றார். ஆக, சோனகம் என்பதை எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் பொருத்துவது பிழையான கருத்து. சோனகம் என்பது சிறப்பாக அரபு மொழியை மட்டுமே குறித்திருக்கின்றது. அரபு மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழி கிடையாது, அது செமிட்டிக் மொழி என்பதையும். அக் காலத் தமிழர்கள் அரபு, பாரசீகம், எகிப்து, கிரேக்கம் ஆகிய மொழிகளின் வேறுபாடுகளை அறிந்திருந்தனர். அவை தனித் தனி மொழிகள் என்பதையும் உணர்ந்திருந்தனர் இதை கொல்லம் செப்பேடு மூலம் நாம் உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
 
பவணந்தி முனிவர் வாழ்ந்த காலம் கிபி 12-ம் நூற்றாண்டு, அக்காலத்தில் ரோம பேரரசு தாங்கள் கூறிய ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யவில்லை. ரேம பேரரசின் வழிதோன்றலான பைசாந்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் கிரேக்கம், துருக்கி, மற்றும் மேற்குக் கரையில் மட்டுமே இருந்தது. மற்றைய பகுதிகளில் பல இஸ்லாமிய பேரரசுகள் தோன்றி ஆட்சி செய்தன. அரேபியம், பாரசீகம், எகிப்து ஆகியவற்றில் அரபு காலிபாக்கள் ஆட்சி செய்திருந்தனர். ஆக சோனகம் என்றால் அது ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் குறிக்கும் என நினைப்பது தவறு.
 
கடாரம், சாவகம் அகிய இரண்டும் வெவ்வேறு மொழிகள். கடாரம் என்பது bahasa melayu, சாவகம் என்பது bahasa java என்பதையும் குறிக்கின்றது. கெடா என்ற ஊரில் தமிழர்கள் கொண்ட தொடர்பினால், மலாயம் முழுவதையும் கடாரம் என்றழைக்கும் வழக்கம் தமிழர்களிடையே வந்தது. சாவகம் என்பது ஜாவாத் தீவைக் குறிப்பதாகும், அங்கு தனியே ஒரு மொழி இன்றளவும் இருந்து வருகின்றது. கடாரத்தை ஆட்சி செய்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சாவகத்தையும் ஆட்சி செய்திருந்தனர். ஒரு பொதுச் சொல்லால் பல மொழிகளை ஒருங்கிணைந்து குறிக்க நினைத்திருந்தால், மயிலைநாதர் கடாரம், சாவகம் என இரண்டு மொழிகளை தனித் தனியே குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் கடாரம் என்றோ, சாவகம் என்றோ குறிப்பிட்டு இருப்பாரே. ஆக, ஆட்சிப் பகுதியின் பெயரால் பல்வேறு மொழிகளை ஒன்றிணைத்துக் கூறியிருக்கலம் என்ற வாதம் பிழையானது. பல மொழிகள் இன்று பேசப்பட்டிருந்தாலும் பவணந்தி முனிவர் காலத்தில் எத்தனை மொழிகள் இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழிகள் பெருமொழிகளாக இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழி பேசுவோர் தமிழகம் வந்து சென்றிருந்தனர் என்பதையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 06:48, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம் குறித்த உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.