[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய [[பீகார்|பீகாரி]]லுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார் மற்றும், ஜமுய் ஆகியவற்றையும், [[ஜார்க்கண்ட்|ஜார்க்கண்டி]]லுள்ள தியோகார், கொட்டா மற்றும், சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி [[மகதம்|மகதத்தையும்]] அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின்படி [[துரியோதனன்]] [[கர்ணன்|கர்ணனை]] அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான்.
மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம் மற்றும், வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே, அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம்.