'''நாம்பு ஓச்சிரோ''' ('''Nambu Yōichirō''', 南部 陽一郎; பிறப்பு: [[ஜனவரிசனவரி 18]], [[1921]] - சூலை 5, 2015) [[சப்பான்|சப்பானில்]] பிறந்து வளர்ந்து [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாழும் [[இயற்பியல்]] அறிஞர். கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய [[அணுத்துகள்]]களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, [[2008]] ஆம் ஆண்டுக்கான இயற்பியல் [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. இவருடன் [[கோபயாசி மக்கொட்டோ]], [[மசுக்காவா தொசிடே]] ஆகிய இரண்டு சப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்<ref>[http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/2008/ 2008 இயற்பியல் நோபல் பரிசு]</ref>.