சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 23:
சுவாமி தயானந்த சரசுவதி, [[ரிஷிகேஷ் |ரிஷிகேசில்]] “அர்ஷ வித்யா பீடம்” மற்றும் [[கோவை]]யில் ”அர்ஷ வித்யா குருகுலம்” எனும் இரண்டு முதன்மையான மையங்கள் நிறுவினார். மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் “அர்ஷ வித்யா குருகுலத்தின் மையம் உள்ளது.
==சாதனைகள்==
* சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
* ''ஆச்சார்ய சபா'' என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இந்து சமய கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து கருத்தரங்குகளை நடத்தி வந்தார்.
* ஓதுவார்கள் நலனுக்காக சுவாமி தயானந்த சரஸ்வதி குரல் கொடுத்தார். [[திருவிடைமருதூர்]] தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவரது கவிதைகள் பல பக்திப் பாடல்களாக வெளியாகியுள்ளன.
* ஏழைகளுக்கு உதவும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனை தலைவராக கொண்டு எய்ம் பார் சேவா என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 120 இடங்களில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதிகளை தொடங்கினார். ஆனை கட்டியில் ஆதிவாசி குழந்தைகளுக்காக 2 இடங்களில் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
==மறைவு==
2012ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு தமது இமயமலை ஆசிரமத்தில் வசித்து வந்தார். செப்டம்பர் 23, 2015 அன்று இரவு 10.20 மணிக்கு காலமானார். அவரது உடல் 25 செப்டம்பர் 2015 அன்று [[ரிஷிகேஷ்|ரிசிகேசில்]] அடக்கம்
==மேற்சான்றுகள்==
|