ஐதராபாத் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* ஆங்கில விக்கி title=Hyderabad_State&oldid=681887155 பக்கத்தின் தமிழாக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
15:49, 25 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
ஐதராபாத்து இராச்சியம் இந்தியாவின் தென்மத்திய பகுதியில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். 1724 முதல் 1948 வரை நிசாம் சந்ததியினரால் ஆளப்பட்டு வந்தது. இதன் தலைநகரம் ஐதராபாத்தாக இருந்தது.
ஐதராபாத்து இராச்சியம் ریاست حیدرآباد హైదరాబాద్ రాష్ట్రం ಹೈದರಾಬಾದ್ ಪ್ರಾಂತ್ಯದ हैदराबाद राज्य | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1803–1948 | |||||||||||
நிலை | பிரித்தானிய இநிதயாவில் மன்னராட்சி (1803–1947) அங்கீகரிக்கப்படாத நாடு (1947–1948) | ||||||||||
தலைநகரம் | அவுரங்காபாத் 1724 முதல் 1763 வரை, ஐதராபாத்து 1763 முதல் 1948 வரை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தக்கினி, மராத்தி, தெலுங்கு, பாரசீகம், கன்னடம் | ||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி (1803–1948) இந்திய ஒன்றியத்தின் மாகாணம் (1948–1950) இந்தியாவின் மாநிலம் (1950–1956) | ||||||||||
நிசாம் | |||||||||||
• 1720–48 | கமார்-உத்-தின் கான், (முதல்) | ||||||||||
• 1911–48 | உசுமான் அலி கான் (கடைசி) | ||||||||||
பிரதமர் | |||||||||||
• 1724–1730 | இவாசு கான் (முதல்) | ||||||||||
• 1947–1948 | மீர் லயிக் அலி (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1803 | ||||||||||
1946 | |||||||||||
18 செப்டம்பர் 1948 | |||||||||||
• பிரிவினை | 1 நவம்பர் 1956 | ||||||||||
பரப்பு | |||||||||||
215,339 km2 (83,143 sq mi) | |||||||||||
நாணயம் | ஐதராபாதி ரூபாய் | ||||||||||
|
தற்கால உசுபெக்கிசுத்தானின் சமர்கந்து பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் முகலாயப் பேரரசில் பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை ஐதராபாத் நிசாம் தோல்வியடையச் செய்து 1724இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
முகலாய பேரரசு நலிவுற்று மராட்டியப் பேரரசு வலிவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.[1][2]
- ↑ Tony Jaques (2007). Dictionary of Battles and Sieges: F-O. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33538-9. http://books.google.com/books?id=Dh6jydKXikoC.
- ↑ Pradeep Barua (2005). The State at War in South Asia. U of Nebraska Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8032-1344-1. http://books.google.com/books?id=FIIQhuAOGaIC.