சங்கரன்கோவிலில் இரண்டுமூன்று சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது '''சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்''' அருகிலும், '''பழைய பேருந்து நிலையம்''' அருகிலும் உள்ளது. மற்றொரு சந்தை '''உழவர் சந்தை''' ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை '''சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம்''' அருகில் உள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் தோவலைக்கு அடுத்தபடியாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது . இங்கிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் , கேரளாவிற்கும் , மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது .