பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:பரதநாட்டியப் பெண்.JPG|thumb|பரதநாட்டியப் பெண்]]
[[Image:Indian-dancer-nataraja.png|thumb|250x316px|right|பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம்]]
'''பரத நாட்டியம்''' [[தென்னிந்தியா]]வுக்குரிய, சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்குரிய]] [[நடனம்|நடனமாகும்]]. இக்கலை வெறும் கலையாக மட்டுமில்லாது, ஓர் தொழிலாகவும் கற்பிக்கப்படுகிறது.
'''பரத நாட்டியம்''' [[தென்னிந்தியா]]வுக்குரிய, சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்குரிய]] [[நடனம்|நடனமாகும்]]. இது மிகத் தொன்மை வாய்ந்ததும், [[இந்தியா]]விலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர - [[இராகம்|ராகம்]], த - [[தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm | title=பரதநாட்டியம் | accessdate=அக்டோபர் 30, 2012 | author=ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் [[தேவதாசி முறை|தேவதாசிப் பெண்கள்]] ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
 
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்]] கூட, [[நடராஜர்]] வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் [[பார்வதி]] ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
 
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது '[[அடவு]]' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது '[[ஜதி]]' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. [[சிதம்பரம்]] ,மற்றும் [[மேலக்கடம்பூர்]] ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
வரி 26 ⟶ 23:
 
== தஞ்சை நால்வர் ==
சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் "தஞ்சை நால்வர்" என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நால்வரும் சகோதரர்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பிறந்து வாழ்ந்தவர்கள். நாட்டியக் கலையிலும் இசைக் கலையிலும் வல்லவர்கள். கோயில்களிலும் அரண்மனைகளிலும் ஆடியநிகழ்ச்சிகளைப் பொது மேடைக்குரிய நிகழ்ச்சிகளாக ஆக்கியவர்கள்.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்"/> தஞ்சை மராத்திய மன்னர், திருவனந்தபுரம் மகாராஜா, மைசூர் மகாராஜா ஆகியோர் இவர்களை ஆதரித்து வளர்த்தனர். அதனால் மேடை நாட்டிய முறை இந்தியாவின் தென்மாநிலங்களில் எளிதாகப் பரவியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவை தென் மாநிலங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள். இம்மொழிப் பாடல்களும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. இது இக்கலைவடிவத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். தஞ்சை நால்வர் நெறிப்படுத்திய ஆடல் முறைகளும், நிகழ்ச்சிகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்"/>
 
== ஆடல் முறைகள் ==
பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:
# நிருத்தம்
# நிருத்தியம்
# நாட்டியம்
ஆகியவையாகும்.
 
=== நிருத்தம் ===
வரி 84 ⟶ 73:
 
== நாட்டிய உருப்படிகள் ==
பரதனாட்டியத்தில் மிகவும் முக்கியமான உருப்புகள்-
பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்
* அலாரிப்பு - பூப்போல் நாட்டியத்தைத் துவங்குவதால் அல்லாரிப்பு என்று பெயர்.
 
* ஜதிசுரம் - ஜதிகளையும் சுவரங்களையும் இனைத்து அமைக்கப்பட்டது.
* அலாரிப்பு
* சப்தம் - கதைகளை நாட்டியம் மூலம் வழங்குவது.
* ஜதிசுரம்
* வர்ணம் - கதைகளையும் ஜதிகளையும் இனைத்து பல வண்ணம்கொண்ட நாட்டியம்.
* சப்தம்
* பதம் - வேகமான சொல்கட்டுகளை கொண்ட நடனவகை.
* வர்ணம்
* தில்லானா - அரங்கேற்றத்தின் கடைசி பாடல்
* பதம்
* மங்களம்- இறுதி வணக்கம்.
* தில்லானா
* விருத்தம்
* மங்களம்
என்பவையாகும்.
 
=== அலாரிப்பு ===
பரத நாட்டிய நிகழ்ச்சியின் முதல் நடனம் அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சி. நிருத்த வகையான ஆடல் இது. அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும்.
 
=== ஜதிசுவரம் ===
இதுவும் அபிநயம் இல்லாத நிருத்த வகை ஆடல் உருப்படியாகும். சொற்கட்டுகள் இடம் பெறாது. ஆனால் சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும். அதனால் இதன் பெயர் ஜதி + சுரம் = ஜதிசுரம் ஆகிறது. ஜதிசுரம் மிக விறுவிறுப்பான ஆடல் உருப்படியாகும். குரலிசையோடு நட்டுவனார் தாளமும் மிருதங்க வாசிப்பும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெறும்.
 
=== வர்ணம் ===
வர்ணம் என்னும் உருப்படியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாள வர்ணம், மற்றையது பதவர்ணம், பரத நாட்டிய நிகழ்ச்சியில் பதவர்ணம் இடம்பெறும். பாடல் அபிநயிக்கத்தக்க பொருளைக் கருவாகக் கொண்டிருக்கும். பதவர்ணத்தின் சுரங்களுக்கு நிருத்தமும் பாடலுக்கு அபிநயமும் செய்யப்படும். இதனால் இசை, தாளம், பாவம் ஆகிய மூன்றும் சிறந்திருக்கும் உருப்படியாகப் பதவர்ணம் இருக்கும்.
 
=== பதம் ===
முழுவதும் அபிநயமாக அமையும் உருப்படி பதம். இது பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. இது காதல் சுவையை உணர்த்தும் உருப்படி, ஆதலால் தலைவன் தலைவி உறவு முறையில் இறைவன் தலைவன். நாட்டியமாடுபவள் தலைவி. இது பரமாத்மா ஆகிய இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மாவின் உறவை உணர்த்தும். இந்த உயர்ந்த உறவு, உலகியல் நிலையில் ‘பதத்தில்’ சித்தரிக்கப்படுகிறது. தலைவி அனுபவிக்கும் பல்வேறு அந்தரங்க உணர்வுகள் இந்த உருப்படியில் அபிநயிக்கப்படும் தாள வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. வெவ்வேறு வகையினரான தலைவியரின் தன்மைக்கு ஏற்ப அபிநயபாவகம் இருக்கும்.முருகன், சிவன், கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் இந்த உருப்படியில் தலைவனாகக் கொள்ளப்படுவர். மன்னர், வள்ளல் ஆகியோரைத் தலைவனாகக் கொண்ட பதங்களும் உள்ளன.
 
=== தில்லானா ===
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி தில்லானா, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும்.
 
=== விருத்தம் ===
தாளக் கட்டுப்பாடு இல்லாத ஓர் உருப்படி ‘விருத்தம்’. பாடகர் பாடலை இராக பாவம் ததும்ப நிதானமாகப் பாடுவார். ஆடுபவர் பாடலை அனுபவித்து நிதானமாக அபிநயம் செய்வார். சம்ஸ்கிருதத்தில் இந்த உருப்படி ‘ஸ்லோகம்’ எனப்படும். தெலுங்கில், "பத்யம்" என்று வழங்கப்படும். இது பக்திச் சுவைக்கு முதன்மை கொடுக்கும் நிகழ்ச்சி.
 
=== மங்களம் ===
பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். பாடகரும் பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.
 
== மேற்கோளும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது