குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
'''குச்சிப்புடி''' {{IPAc-en|k|uː|tʃ|i|ˈ|p|uː|d|i}} ([[தெலுங்கு]]: కూచిపూడి) [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது [[தென்னிந்தியா]] முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா]] மாவட்டத்திலுள்ள ''குச்சிப்புடி'' என்னும் [[கிராமம்|கிராமத்தின்]] பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Banham|first=edited by James R. Brandon ; advisory editor, Martin|title=The Cambridge guide to Asian theatre|year=1993|publisher=Cambridge University Press|location=Cambridge, England|isbn=9780521588225|page=96|url=http://books.google.co.in/books?id=ttnH5W9qoBAC&dq=kuchipudi&source=gbs_navlinks_s|edition=Pbk. ed.}}</ref>
 
[[கருநாடக இசை]]யோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு [[மிருதங்கம்]], [[வயலின்]], [[புல்லாங்குழல்]] மற்றும் [[தம்புரா]] ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.
குச்சிப்புடி என்னும் ஓர் நாட்டிய கலை, உலகளவில் போற்றப்பட்டு பெயர்பெற்ற ஓர் கலையாக திகழ்கிறது. மென்மையான இசையும் வேகமான சொல்லுக்கட்டு கொண்ட இசை- இரண்டையும் கொண்டது தான் இப்பாரம்பரிய கலை.
 
==வரலாறு==
நெடுங்காலமாக [[தேவதாசி]]கள் இந்த [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடகத்தை]] ஆந்திராவின் [[கோவில்]]களில் ஆடிவந்தார்கள்{{cn}}. காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் [[பிராமணர்]]களால்{{cn}} இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே{{cn}} ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
 
 
தற்காலத்தில் ஆடப்படும் '''குச்சிப்புடி''' ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது{{cn}}. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள [[புராணக் கதை]]களையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த [[நடனம்]].
 
 
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது{{cn}}. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.{{cn}}
 
==இசைக்கருவிகள்==
இந்த நாட்டிய இசையில் கருவிகளாக [[ஹார்மோனியம்]], [[கஞ்சீரா]], [[புல்லாங்குழல்]], [[வீணை]] மற்றும் [[வயலின்]] பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
 
==நடனமுறை==
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் [[பானை]]யுடனும் ஆடுவதுண்டு.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குச்சிப்புடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது