தீபச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தீபச்செல்வன்''' (பிறப்பு:..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:47, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாவார். நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழ் சிறப்புக் கலையில் பட்டம் (டீ.யு)பட்டமும், தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் தொடர்பியல் துறையில் M,Phil பட்டமும் பெற்றவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபச்செல்வன்&oldid=1933905" இலிருந்து மீள்விக்கப்பட்டது