அண்டியோக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 13:
அண்டியோக்கசுக்கு முந்தைய கல்விக்கழக ஐயுறவுவாதம் பிளாட்டோ வெற்றிகரமாக தன் மாணாக்கர்களுக்குக் கற்பித்த உண்மையைக் காண்பதற்கான சரியான முறை நுண்ணியற் சிந்தனைமுறையே என்றும் புலன்களின் பெரும்பாலான உளப்பதிவுகளை நம்பக்கூடாது என்றும் வற்புறுத்திய முயற்சிகளில் தோன்றியது எனலாம். சிசெரோ எந்தவகை அறிவிலும் உறுதிபாடு போன்ற ஏதும் நிலவ வாய்ப்பில்லை எனக் கருதும் மெய்யியலாளர் வரிசையில் பிளாட்டோவை வகைப்படுத்துகிறார்;<ref>Cicero, ''Academica'', ii. 23.</ref> இது அவர் புலன்கள், புலன்காட்சிக்கான நம்பத்தகுந்த வாயிகள் அல்லவென்று கூறுவது, அவை புலப்படுத்தும் அறிவுவகை அவ்வழி அறிதல் சிந்தனை முடிவுகளையும் பொய்ப்பிப்பதாகக் கருதுவதுபோல் தோன்றுகிறது.
இத்தகைய வாதங்களில் இருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. இதே வினவல்கள் முன்பே அறிவியலின் தன்மையையும் பல்வேறுவகை உண்மைகளையும் பற்றிப் பேசும்போது இவை அறிதிறனின் அல்லது நுண்மதியின் விளைபொருள்கள்;வாய்ப்புள்ள நிகழத்தகும் அதேநேரம் உறுதிப்படுத்தவியலாத அறிவாகுமென ஆழமாக பிளாட்டோவாலும் அரிசுடாட்டிலாலும் அலசப்பட்டுள்ளன. இதன் விளைவு கல்விக்கழகத்தினர் புறக்கணித்த [[இணைமுரண்வாதக்]] கலைக்கு இவர் புத்துயிர்ப்பூட்டினார். எனவே ஆண்டியோக்கசுவின் அறப்பயில்விப்பு குறித்து நிலவும் தகவல்கள் இதைத் தான் காட்டுகின்றன. சுதாயிக்குகளின் முரண்புதிகளுக்கோ கல்விக்கழகத்தினரின் ஐயுறவுவாதத்துக்கோ விட்டுகொடுக்காமல் இவர் அரிசுடாட்டிலுக்கு இணையாண முதன்மை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தார்: மகிழ்ச்சி [[நேரிய வாழ்க்கையில்]] தான் கிடைக்கும். என்றாலும் அது புறநிலைப் பொருள்களைச் சாராத தற்குறிப்பல்ல அல்லது தனித்த விளைவல்ல என்றார்.<ref>Cicero, ''Academica'', ii. 42; ''de Finibus'', v. 25; ''Tusculanae Quaestiones'', v. 8.</ref> எனவே இவர் அனைத்துக் குற்றங்களூம் சமமே எனும் சுதாயிக்குகளின் நெறிமுறையை ஏற்க மறுத்தாலும்,<ref name="cicero1">Cicero, ''Academica'', ii. 43</ref> அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிவைக்க வேண்டும் என்பதில் அவர்களோடு ஒத்துப்போனார். மொத்தத்தில் சிசெரோ இவரைச் சுதாயிக்குகளுக்குகளின் தரத்தில் வைக்க முயன்றாலும்,<ref name="cicero1"/>இவர் தன்னைப் [[பன்கூறுவாத/கலப்புவாத]] மெய்யியலாளராக்க் கருதி, பழங்கல்விக்கழக நடைமுறையை மீட்க இவர் சுதாயிக்கியத்தையும் பெரிபேடெடிக்கியத்தையும் ஒருங்கிணைக்க முயன்றார்.<ref>Sextus Empiricus, i. 235.</ref>
|