உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு [[புத்தர்]] காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவாந்தி[[அவந்தி]] அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான [[அசோகன்அசோகர்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் [[சுங்கர்]]களும், [[சாதவாகனர்]]களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், [[மேற்குச் சத்திரப்புசத்திரபதிகள்]]கள் என அறியப்பட்ட [[இந்திய-சித்தியர்]]களானஇந்தோ [[சாகர்சிதியன் பேரரசு|சாகர்களும்]]களும்இந் நகருக்காகப்இந்நகருக்காகப் போட்டியிட்டனர். [[சாதவாகனர்|சாதவாகன]] மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. [[குப்தர்குப்தப் பேரரசு|குப்தர்கள்]]கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. [[விக்ரமாதித்யா|விக்கிரமாதித்தன்]] எனப்பட்ட [[இரண்டாம் சந்திரகுப்தன்|இரண்டாம் சந்திரகுப்தனின்]] மரபுவழித்மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க [[புலவர்]]கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.
[[பெருங்கதை]] என்னும் நூலில் [[பிரச்சோதனன்]] என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}} உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்</ref>
தொல்லியலாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் பொறுத்தமட்டில், ‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்ற ஒரு சொற்றொடர், இன்றும் பாவனையில் இருந்து வருகிறது. இந்தக் குறிப்பிட்ட அடையாளமானது உஜ்ஜைன் என்ற ,இந்த இடத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பெருமெண்ணிக்கையிலான நாணயங்களில் இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர். இந்த அடையாளமானது இரண்டு சம அளவான நேர்கோடுகள் சமச்சீராக இருக்கும் விதத்தில் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு, அவற்றின் முனைகளில் சம அளவுகளிலான முழுமையான வட்டங்களோ, அல்லது வளையங்களோ வைக்கப்பட்ட அடையாளமாகும். இந்த அடையாளத்திற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும்.