டியூரரின் காண்டாமிருகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
'''டியூரரின் காண்டாமிருகம்''' என்பது, 1515ல் செருமன் ஓவியரும் அச்சுத்தயாரிப்பாளருமான [[அல்பிரெக்ட் டியூரர்]] என்பவரால் உருவாக்கப்பட்ட மரச் சிற்பம் ஒன்றைக் குறிக்கும். இது, அதே ஆண்டில் லிசுபனுக்கு வந்த [[இந்தியக் காண்டாமிருகம்]] ஒன்றைப் பார்த்துப் பெயர் தெரியாத ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட பருமட்டான வரைபடம் ஒன்றையும், எழுத்துமூல விபரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உரோமன் காலத்துக்குப் பின்னர் [[ஐரோப்பா]]வில் உயிருள்ள காண்டாமிருகத்தைக் கண்டது அதுவே முதல் முறை. ஆனால், டியூரர் உயிருள்ள காண்டாமிருகத்தை என்றும் பார்த்ததில்லை. 1515ன் பிற்பகுதியில், போர்த்துக்கலின் அரசனான முதலாம் மனுவேல் அக் காண்டாமிருகத்தைப் [[பாப்பரசர் பத்தாம் லியோ]]வுக்குப் பரிசாக அனுப்பி வைத்தார். ஆனால், இது 1516ல் [[இத்தாலி]]யின் கரையோரத்தில் கப்பல் மூழ்கியபோது இறந்துவிட்டது.
 
==மேற்கோள்கள்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[100 பொருட்களில் உலக வரலாறு]]
 
[[பகுப்பு:கலைப்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டியூரரின்_காண்டாமிருகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது