சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
[[இந்தியா|இந்தியாவில்]] தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகலைகொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். அகிம்சை சமண சமயத்தின் தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயங்களை ஏறத்தாழ 1 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகின்றார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஜைனர்களால் எழுதப்பட்ட நிகண்டுகளில் கூட சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என ஜைன ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர்.
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
வரிசை 41:
 
'''சிரமணம்''' என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம் எனும் தமிழ்ச்சொல்{{cn}}. கடிய நோன்புகளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்குச் சிறப்பு விளக்கம் செய்வர்.
 
==சமணம் – தமிழ் நெறியில் சொல்விளக்கம்==
* ஜினன் (ஜினேந்திரன்) என்னும் சொல்லை பழங்காலத் தமிழர் சினன் எனத் தமிழாக்கம் செய்துகொண்டு வழங்கினர்.<ref>பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சின்னே புத்தன் - ஆசிரியநிகண்டு</ref>
* சமணமதத் துறவிவன் அம்மணமாக வாழ்ந்தனர். அம்மணனைப் புகழூர் மலையிலுள்ள தமிழி (தமிழ்ப்பிராமி) கல்வெட்டு ‘தாஅமணன்’ <ref>தாஅமணன் செங்காயபன் உறைய ... அறுத்த கல்</ref> எனக் குறிப்பிடுகிறது. அம்மணமாகத் திரியும் துறவிகளின் மதத்தைப் பின்பற்றிய மக்களைப் பெரியபுராணம் போன்ற சைவ நூல்கள் அமணர் <ref>அந்நிலை அமணர் தங்கட்கு அழிவு முன் சாற்ற - பெரியபுராணம் காண்டம் 2, சருக்கம் 6, பாடல் 631</ref> என்று குறிப்பிடுகின்றன.
* அந்தத் துறவிகனின் உருவங்கள் சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. சம்மணத் துறவிகளின் மதத்தைச் சமணம் என்றனர்.
 
==வரலாறு==
 
வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குப் பிறந்த மகாவீரரால் இந்தச் சமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்தார். மக்கள் இவரை ஜெயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப்பெற்றனர். தமிழில் ஆடையணியாதவர்கள் எனும் பொருள் அமணர்கள் என்ற பொருளில் அழைக்கப்பெற்றனர். அச்சொல் திரிந்து சமணர் என மாறியது.<ref>தலித் முரசு ஆகஸ்ட் 2008</ref>
 
[[வைணவ சமயம்|வைணவ சமய]] சார்புடைய விஜயநகர அரசும், [[சைவ சமயம்|சைவ சமய]] சார்புடைய பேஷ்வாக்களின் அரசும் இடிபாடடைந்த சமணக் கோவில்களைப் புதுப்பித்தன. தமிழகத்தில் பக்தி இலக்கிய காலத்திற்குப் பின்பு ஆண்ட மன்னர்கள் சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருந்தமையால் சமணத்தின் வளர்ச்சி தடைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, மதுரையைச்சுற்றியுள்ள எட்டு குன்றுகள், புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடுமியான் மலை போன்ற இடங்கள் சமணத்தலங்கள் என சிறப்புற அறியப்பெறுகின்றன.<ref>http://www.jeyamohan.in/?p=25066 தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்</ref>
 
== சமண சமயப் பிரிவுகள்: ==
 
[[படிமம்:Tirthankaras.jpg|thumb||24 தீர்த்தங்கரர்களில் முதல்வர் [[ரிசபதேவர்|ஆதிநாதரும்]] கடையவர் [[மகாவீரர்|மகாவீரரும்]]]]
 
சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் [[திகம்பரர்கள்|திகம்பரர்களும்]] <ref>http://www.educationalservice.net/2010/april/20100442_jain.php</ref>, வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் [[சுவேதம்பரர்கள்|சுவேதம்பரர்களும்]] இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
 
* [[சுதனக்வாசி]] - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.
* [[சுவேதம்பர தேராபந்த்]] - ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பெற்றது.
* [[பிசாபந்த]]
* [[முர்டிபுஜக]] - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.
 
==சமணத்தின் அடிப்படைக் கொள்கைகள்==
 
சமண சமய இல்லறத்தார்களும் மற்றும் சமணத் துறவிகளும் பின்பற்ற வேண்டிய அறங்களை '''அனுவிரதம்''' என்றும் '''மகாவிரதம்''' என்று அடைவு செய்துள்ளது. விரதம் என்பது நோன்பினை குறிக்கும். வாழ்க்கையை ஒரு விரதமாக கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் குறிகோள் ஆகும். இதனால்தான் இல்லறத்தாரைச் '''சாவகநோன்பிகள்''' என்றும் துறவறத்தாரை '''பட்டினி நோன்பிகள்''' என்றும் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] காணப்படுகிறது.
 
===இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்===
# அகிம்சை
# வாய்மை
# கள்ளாமை
# துறவு
# அவாவறுத்தல்
 
==== 1. அகிம்சை (கொல்லாமை)====
இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து அகிம்சை என்கின்றனர். ”'''அஹிம்சோ பரமொ தர்ம'''” என்பது மகாவீரரின் பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். சமண சமயத்தின் பன்னிரண்டு அங்க ஆகமங்களில் முதல் ஆகமம் ஆகிய '''ஆயாரங்க சுத்தத்தில்''' '''அகிம்சை''' எனப்படும் அறத்தினை '''மகாவீரர்''' போதித்துள்ளார். அதன் ஒரு பகுதியில் “ மனிதர்களே “, எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தவோ, வதைக்கவோ, கொல்லவோ கூடாது. பிறறை அவமதிப்பது கூட இம்சையாகும். ஆகவே அகிம்சை என்பது உயிர்க்கொலை புரியாமை மட்டும் அன்று; ம்ன்னுயிர்க்கும் இன்னா செய்யாமையும், பிறறை அவமதிக்காமையும் அகிம்சை ஆகும். மனிதர்களே, நீங்கள் எடுத்துவரும் பல்வேறு பிறவிகளில், உங்களால் இம்சிக்கப்பெறும் உயிராகவும் நீங்களே பிறப்பெடுத்து இருப்பீர்கள்; ஆகவே, எல்லா உயிர்களையும் உங்கள் உயிர் போல மதித்து நடப்பதே அகிம்சையாகும், என்று [[மகாவீரர்]] அறிவுறுத்தியுள்ளார்.
 
எவ்வகை அறங்களுக்கும் மூலமாகவும் முதலாகவும் சுடர்விடுவது '''தயா''' எனப்படும் '''பெருங்கருணை''' ஆகும். இப்பேரருள் வாய்க்கப் பெற்றவர்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். அனைத்துயிர்களையும் சம நோக்குடன் பார்ப்பான்.
 
==== 2. வாய்மை (அசத்திய தியாகம்)====
மகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது '''பொய் பேசாமை''' எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். '''தியாகம்''' என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.
 
* எந்த ஒரு கருத்தையும் ஆராயாது பேசுதல் கூடாது.
* சீற்றத்துடன் பேசுதல் கூடாது.
* ஆசைகாட்டி பேசுதல் கூடாது.
* அச்சம் ஏற்படும்படி பேசுதல் கூடாது.
* பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காகவோ, விளையாட்டிற்காகவோகூட பொய் பேசுதல் கூடாது.
 
அகிம்சையும் சத்தியமும் அறமாகக் கொண்டு செயல் புரிவோர் பல்வேறு [[யோக சித்திகளும் பலன்களும்|சித்திகளைப்]] பெறுவர் என்பது சமண சமயத்தின் நம்பிக்கை. [[காந்தியடிகள்|காந்தியடிகளின்]] [[அறப்போராட்டம்|அறப்போராட்டத்திற்கு]] மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமுமே இரு பெரும் ஆயுதங்களாக பயன்பட்டு வெற்றி தேடித் தந்தது.
 
==== 3. கள்ளாமை====
மகாவீரரின் அறிவுரைகளில் மூன்றாவது அறமாகப் பேசப்படுவது '''அஸ்தேயம்''' ஆகும். ஸ்தேயம் எனில் களவு. அஸ்தேயம் எனில் களவு புரியாமை எனும் கள்ளாமையாகும். கொல்லாமை அறத்தினால் பிற உயிர்களுக்கு தீங்கு புரியாமை குறித்த மகாவீரர் கள்ளாமை அறத்தினால் பிறர் உடைமைகளுக்கு தீங்கு நேராதபடி வாழவேண்டும் என வலியுறுத்துகிறார். எப்பொருளாக இருப்பினும், பிறர் கொடாத பொருளைக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் கள்ளாமையாகும்.
 
சமண நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.
 
1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல்
2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல்
3 தங்குமுன் வீட்டின் உரிமையாளரின் இசைவினைப் பன்முறை வேண்டல்
4 ஆசனங்கள் மற்றும் பிறபொருட்களைப் பயன்படுத்த இசைவு கேட்டல்
5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்
 
==== 4. பிரமச்சரியம்====
காமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.
 
==== 5. அவாவறுத்தல்====
அவா அறுத்தல் என்பது மகாவீரரின் ஐந்தாம் அறமாகும். அவாவறுத்தல் என்பது ஆசையை குறிப்பதாகும். அவாவறுத்தல் (அவா + அறுத்தல்) ஆசையை துறத்தலாகும். ஆனால் அறநெறியில் பொருள் ஈட்டும்படியும், ஆனால் முறைகேடாக செல்வத்தை ஈட்டுவதை மகாவீரர் கண்டித்தார். எனவே, அளவாகவும், குறைவாகவும் பொருள் ஈட்ட வேண்டும், தேவைக்கு மேல் பொருள் ஈட்டக்கூடாது என்பது கருத்தாகும்.
 
===[[துறவறம்|துறவறத்தார்]] கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்===
# ஐம்பொறி அடக்கம் ஐந்து
# ஆவஸ்யகம் ஆறு
# லோசம்
# திகம்பரம் (உடை உடுத்தாமை)
# நீராடாமை
# பல் தேய்க்காமை
# தரையில் படுத்தல்
# நின்று உண்ணல்
# ஒரு வேளை மட்டும் உண்ணல்
 
==சமணத்தின் பிற கொள்கைகள்==
 
===நிலையாமை===
தோன்றும் பொருட்கள் யாவும் ஒருநாள் அழியக்கூடியதே. எனவே உடல்நலமாக உள்ளபோதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் அறச்செயல்களை ஆற்றுதல் வேண்டும்.
 
===வினைக்கோட்பாடு===
ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்வினைக்கோட்பாட்டை, '''ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்''' எனச்சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.
 
===சுபாவவாதக் கொள்கை===
ஒருவர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உண்டு என வைதீக மதங்கள் கூறின. ஆனால் சமண சமயம், ஒருவர் மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்த பாவத்தை இப்பிறவிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவித்து தீர்ப்பது தவிர வேறு வழியில்லை எனக்கூறுகிறது. எனவே மனவடக்கம், சொல்லடக்கம் மற்றும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று சமணம் அறிவுறுத்துகிறது.
 
===நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)===
கண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.'''சீவன்''' என்றும் மற்றவற்றை 2. '''அசீவன்''' பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆஸ்வரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.[[வீடுபேறு]].
 
==பஞ்சப்பரமேட்டிகள் (வழிப்பாட்டுக்கு உரியவர்கள்)==
[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்கள்]] வீடுபேறு பெற்று அனந்த சுகத்தில திளைத்திருக்கும் முற்றும் உணர்ந்த ஞானிகள். இவர்களையே வழிபடுதல் சமணர்களின் நெறியாகும். அன்றியும் அருகர், சித்தர், ஆச்சாரியார், ஆசிரியர் மற்றும் சாதுக்கள் எனும் ஐவரையும் பஞ்சப்பரமேட்டிகள் எனப் போற்றி வணங்குவர்.
 
==கலை மற்றும் கட்டிடக்கலை==
[[File:Shravanabelagola2007 - 11.jpg|thumb|[[சரவணபெலகுளா]]வில் பாகுபலியின் சிற்பம்]]
 
வெண்தாமரைக்குளம் எனும் சிரவணபெலகுளாவில் அமைந்துள்ள சமணத்துறவியான [[பாகுபலி]]யின் சிற்பம் சமணர்களில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இச்சிலை 57 அடி உயரமானதாக உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சமணர்களில் பள்ளிகள் என்று அழைக்கப்பெறும் குகைகள் காணப்பெறுகின்றன. இவற்றில் சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்தியா முழுமையும் உருவ வழிபாட்டிற்காக அமைக்கப்பெற்ற கோவில்களும் சமணர்களின் கலையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
 
== சமணமும் தமிழ்நாடும் ==
{{தமிழர் சமயம்}}
 
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]] என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடபகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபெலகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=7</ref>
 
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், [[தமிழ் மொழி]]யில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப் படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. [[காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்|(அகம் 123)]]
 
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்பந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.<ref>பெரியபுராணம் சமணர்களைக் கழுவேற்றிய படலம்</ref>
 
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு [[இலங்கை]]க்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த வழியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன... தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன." <ref>செ. கணேசலிங்கன். (2001). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம். பக்கங்கள் 50.</ref>
 
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமண சமயத்தை பரப்ப வந்த சமண துறவிகளைத் தேவகோட்டை சிற்றரசன் விரட்டியதால் உயிருக்கு அஞ்சித் தற்போதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமணத் துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற [[சித்தன்னவாசல்]] ஓவியங்கள் ஆகும்.
 
<gallery>
 
File:Mannargudi Mallinatha Swamy Temple.png|[[மல்லிநாதர்]] சமணர் கோயில், [[மன்னார்குடி]]
File:Jain Sculptures at Othakakai, Madurai.jpg|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள், [[யானைமலை, மதுரை|யானைமலை]], [[மதுரை மாவட்டம்]]
File:RELICS OF JAINS - Bas-relief sculptures.jpg|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின் சிற்பம்]], பேச்சிப்பள்ளம், [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]], [[மதுரை மாவட்டம்]]
File:Jain Sculpture from the Samanar Malai, Madurai..JPG|[[மகாவீரர்]] சிற்பம், செட்டிப்புடவு, [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]], [[மதுரை மாவட்டம்]]
File:Jaina abode Kalugumalai.JPG|சமணர் பள்ளியின் ஒரு பகுதி [[கழுகுமலை]], [[தூத்துக்குடி மாவட்டம்]]
 
 
</gallery>
=== சமணரும் தமிழும் ===
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம் மிக்க மொழி என்னும் பெருமையைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் [[இலக்கியம்]], [[இலக்கணம் (மொழியியல்)]], [[உரைநடை]], [[அகராதி நிகண்டு]], மற்றும் [[தருக்கம்]] ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." <ref>ஆ. வேலுப்பிள்ளை. (1985). ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. பக்கம் 36.</ref>
{{Refimprove}}
* [[சீவக சிந்தாமணி]] (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
* [[வளையாபதி]] (72 செய்யுள்கள் கிடைகின்றன)
* [[நாலடியார்]]
* [[பழமொழி நானூறு]]
* [[ஏலாதி]]
* [[திணைமாலை நூற்றைம்பது]]
 
====ஐஞ்சிறுகாப்பியம்====
* [[உதயணகுமார காவியம்]] (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
* [[நாககுமார காவியம்]] (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
* [[யசோதர காப்பியம்]] (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
* [[நீலகேசி]] (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
* [[சூளாமணி]] (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
* [[பெருங்கதை]] (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
 
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||சமண சாதுக்கள்]]
 
==சமண சமய அறிஞர்களும் நூல்களும்==
* பௌம சரிதம் : மகாவீரரின் நிலையாமை கொள்கை குறித்து பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூல்.
* பூர்வங்கள் : தொடக்க கால [[சமணர்]]களின் புனித இலக்கியம்.
* சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.
* தசவைகாலிக சூத்ரம் : சமண சமய மூல ஆகமம்.
* உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.
* தத்துவார்த்த அதிகாம சூத்திரம் மற்றும் சர்வார்த்த சித்தி : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல். காலம் கி. பி. 100.
* பிரவசன சாரம், நியமசாரம் மற்றும் பஞ்சாஸ்திகாயம் : நூலாசிரியர், குந்தகுந்தாச்சாரியர், காலம், கி. மு. 50 - கி. பி. 50
* மூலசாரம் : நூலை பலர் எழுதியுள்ளனர். காலம் கி. பி. 100 முதல் 400 முடிய.
* சேத சூத்திரங்கள், உபாங்கம் மற்றும் பிரகீர்ணம் : இந்நூலைகளை பலர் எழுதியுள்ளனர். காலம் கி. பி. 400.
* பக்தப் பிரஞ்ஞா : நூலின் ஆசிரியர் மற்றும் காலம் தெரியவரவில்லை.
* அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.
* திரவிய சங்கிரகம் : திகம்பர பிரிவை சார்ந்த நேமி சந்திரர் எழுதியது. காலம் கி. பி. 1000. இதில் உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என்ற அங்கங்கள் கொண்டுள்ளது.
* தத்துவ தீபிகை : நூலாசிரியர் அமிர்த சந்திரசூரி, திகம்பரர்.
* [[சிலப்பதிகார உரை]] : சமணரான [[அடியார்க்கு நல்லார்]]. காலம் கி.பி., 1200.
* குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.
* குணரத்ன: கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.
* ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன முக்காயம் என்ற நூலை எழுதியவர்.
* ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி., 1018 - 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.
* பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.
* ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.
* வித்யானந்தா : சமண சமய [[தர்க்கம்|தர்க்கவியல்]]வாதி.
* யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி
* [[பவணந்தி|பவணந்தி முனிவர்]] : தமிழ்மொழியில் [[நன்னூல்]] எனும் இலக்கணநூல் எழுதிய சமணர். காலம் கி. பி., 1200.
 
==ஆதாரநூல்கள்==
* இந்தியத் தத்துவக் களஞ்சியம், முதல் தொகுதி, முனைவர். சோ. ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்
* இந்தியத் தத்துவ இயல், [[தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா]], அலைகள் வெளீட்டகம், சென்னை
 
== இவற்றையும் பார்க்க ==
* [[:en:Jainism]] - [[ஜைனம்]]
* [[:en:Tamil Jain]] - [[தமிழ்ச் சமணர்]]
 
== மேற்கோள்கள் ==
வரி 223 ⟶ 48:
*[http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p20231n1.htm சமண சமயத் தோற்றம்]
* [http://www.jainworld.com/JWTamil/ ஜெயின் வேர்ல்டு இணையத்தளம்]
* [http://banukumar_r.blogspot.com/ தமிழ்ச் சமணம் !]
* [http://cms.tn.gov.in/sites/default/files/gos/bcmbc_e_65_2014_0.pdf சமய சிறுபான்மையோர் பட்டியலில் சமணர்கள்]
* [http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_6796.html சமணர்களின் வரலாறு சொல்லும் பொன்னூர்மலை] - Dr Mu.Elangovan
* http://www.hindu.com/mp/2004/07/05/stories/2004070502350400.htm
* http://hinduonnet.com/thehindu/lf/2002/04/25/stories/2002042506980200.htm
* http://web.archive.org/20031031231112/www.geocities.com/tamiljain
* http://www.jainworld.com/JWTamil/jainworld/JWTamil.htm
* http://www.census.tn.nic.in/religion.aspx
* [http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mahavir-sculpture-found-in-thanjavur/article256610.ece Mahavir sculpture found in Thanjavur]
* [http://www.thehindu.com/todays-paper/tp-national/thirthankara-sculpture-found/article2616858.ece Thirthankara sculpture found in Doli]
* [http://www.thehindu.com/todays-paper/tp-national/statue-found-in-pudukottai-not-of-buddha-says-scholar/article5235715.ece Statue found in Pudukottai not of Buddha, says scholar. It is a Jain Tirthankara]
*[http://thillairajan1-thillairajan.blogspot.in/2011/11/blog-post.html தஞ்சாவூர் மாவட்டம் திருப்பழனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிலை Jainism in Thanjavur District of Tamil Nadu, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi]
 
[[பகுப்பு:சமணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது