'''விருசபர்வன்''' (Vrishparva) [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] மற்றும் [[மகாபாரதம்]] போன்ற தொன்ம நூல்களில் கூறப்படும், மந்திர-தந்திரங்களில் தேர்ந்த அசுரர்கள் எனப்படும் தானவர்களின் அரசன் ஆவான். தனது குலகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] உதவியுடன் [[இந்திரன்|இந்திரனை]] பல போர்களில் வெற்றி கொண்டவன்.
சுக்கிராச்சாரியரிடம், மரணித்தவர்க்ளை எழுப்பும் மந்திரத்தை அறிய வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் [[கசன்|கசனை]], விருசபர்வ மன்னரின் ஆட்கள், பல முறை கொல்ல முயன்ற போது, கசன் மீதான் அன்பினால் [[தேவயானி]]யால் காக்கப்பட்டான்.
விருசபர்வனின் மகள் [[சர்மிஷ்டை]] தேவயானியின் தோழியாவாள். தேவயானி [[யயாதி]]யை மணக்கும் போது, சர்மிஷ்டையை வரதட்சணையாக விருசபர்வனால் கொடுக்கப்பட்டாள்.