காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
இசைக்கலைஞர் |
||
வரிசை 1:
தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றவர் விளங்கிய நாகசுரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் ஆவார்.
'''பிறப்பு'''
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி எனும் ஊரில் 1907 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை.
'''காருகுறிச்சி இசைத்துறைக்கு வந்த சூழல்'''
காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் பிரபலமான நாகசுரவித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம் இசை்கவேண்டும். இதற்கிடையில், நெல்தானிய அளந்துகொடுக்கும் பரம்பரை வேலையாகப் பலவேசத்திற்கு இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியில் இருந்தார். பெரும்பண்ணையார் கோபக்காரர். “மாப்பிள்ளை தயார். உங்களை அழைத்துவரச்சொன்னார்” என்று ஆள்வந்து அழைத்தும் தாமதப்படுத்தினார் நடேசபிள்ளை. என்ன ஆகப்போகிறதோ! என்று பயந்தார் பலவேசம். அதற்குமாறாக, பண்ணையார், நடேசபிள்ளையிடம், “அதற்கென்ன! உங்கள் விருப்பப்படி வாருங்கள்” என்று சொல்லிச்சென்றார். இதைக்கண்ட பலவேசம், கலைக்கு உள்ள மரியாதை அறிந்து, தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவிசேர்ந்த ஒரு நாகசுரக் கலைஞரிடம் கற்கச்சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாகசுரக் கலைஞராக மாற்றியது.
'''நாகசுர ஆசிரியர்கள்'''
அருணாசலம் அவர்கள் சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சை மண்ணில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் சேர்க்கச் சென்றார்.
'''திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் சீடனாகுதல்'''
திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் தன் பிள்ளையைச் சீடானக்குவது எப்படி? யார் அவனை அழைத்துச் செல்வார்கள் ? என்றெல்லாம் பலவேசம் சிந்தனை செய்தார். இதற்கிடையில், காருகுறிச்சியில் உள்ள கு.எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறையார். அவருடன் வாசிக்கவந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல்போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக்கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகவிட்டது. அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.
'''நட்பு'''
காருகுறி்ச்சியாரிடம் மக்கள் நன்மதிப்பு தந்திருந்தனர். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.
'''சிறப்பு'''
சென்னைத் தமிழிசைச்சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.
'''தவில்கலைஞர்கள்'''
காருகுறிச்சி அருணாசலத்தின் கச்சேரிக்குப் பலர் தவில் வாசித்திருந்தாலும், புகழ்பெற்ற சில தவில்கலைஞர்கள் உடன் வாசித்திருந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை, கரந்தை சண்முகப் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகவர் ஆவர்.
'''திரைப்படப் பங்களிப்பு'''
அருணாசலம் தனது நாகசுர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்பதோடு, சில திரைப்படங்களிலும் வழங்கியுள்ளார். “கொஞ்சும் சலங்கை” என்னும் திரைப்படத்தில், எஸ்.ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள. “சிங்காரவேலனே” என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும்.
'''இறப்பு'''
கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 08.04.1964 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
|