மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
அரசன் ((''பி. என். சேசகிரி பாகவதர்'') வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை (''பி. வி. ராவ்'') அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம் (''கொளத்து மணி'') ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள்.<ref name="SB"/>
 
மங்கம்மாவுக்கு ஒரு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் (''[[ரஞ்சன்]]'') தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான்.<ref name="SB"/>
 
==பாடல்கள்==
மங்கம்மா சபதம் திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.<ref name="SB"/>
* ''புத்தியுள்ள மனிதரென்றால் புகழுடன் வாழ்வார்..'' (மங்கம்மா, [[மாண்டு]], திச்ரம்)
* ''அஞ்சாதே நீ வா..'' (மங்கம்மா, [[ஹம்சத்வனி|அம்சத்வனி]], ஆதி)
* ''வண்ணப்புறாவே நீயார்..'' (சுகுணன், சிந்துபைரவி, ஆதி)
* ''ஆனந்தமீதே பரமானந்தமீதே..'' (மங்கம்மா, இந்துத்தானி, திச்ரம்)
* ''சிறிதும் கவலைபடாதே'' (பங்கம்மா, [[கரஹரப்பிரியா|கரகரப்பிரியா]], ஆதி)
* ''பெண்புத்தியாலே வீண் கனவு கண்டேனே'' (மங்கம்மா, காதநாமக்கிரியா, ஆதி)
* ''உடல்நலமே பெறலாம் சதாஇதாலே'' (யமுனா, இந்துத்தானி, ஏகம்)
* ''ஜெயமே ஜெயமே ஜெயமே தந்தையே'' (மங்கம்மா, [[பிலகரி]], ரூபகம்)
* ''பொண்ணிருக்கு பொண்ணிருக்கு பூலோக ரம்பை போலே'' (சாத்தான், துர்கா, ஏகம்)
* ''உம்மேலேதான் ஆசை ஐயேவே ஆனேன்'' (யமுனா, பீலு, ஏகம்)
* ''பாரில் நல்வழி காட்டி'' (மங்கம்மா, [[தோடி]], ஆதி)
* ''காவாலிப் பயலே சும்மா கிடடா'' (சாத்தான்-சாரங்கி, இந்துத்தானி, ஏகம்)
* ''புன்னகைதவழ் வதன் பூர்ணிம சந்திரனே'' (மங்கம்மா, [[யதுகுலகாம்போதி]], ஜம்பை)
* ''ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் (மங்கம்மா-சுகுணன், [[நாகஸ்வராவளி]], ஆதி)
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மங்கம்மா_சபதம்_(1943_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது