திண்ணைகள் இருக்கையாகப் பயன்படுவதனால், மனிதர்கள் காலைக் கீழே வைத்துக்கொண்டு இருப்பதற்கு வசதியாக ஏறத்தாளஏறத்தாழ ஒன்றரை [[அடி (அலகு)|அடி]] (45 ச.மீ) உயரத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. திண்ணைகளின் பின்பகுதி பெரும்பாலும் சுவரை அண்டியதாக இருக்கும். முன்பகுதி திறந்து இருப்பதுடன், திண்ணைக்கு மேல் அமைந்திருக்கும் [[கூரை|கூரையைத்]] தாங்கும் [[தூண்|தூண்களையும்]] கொண்டிருக்கும். இரண்டு திண்ணைகளுக்கு நடுவே வாயில் கதவை நோக்கிச் செல்லும் தாழ்வான நடைபாதை ''நடை'' என வழங்கப்படுகின்றது.