சார்வாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சார்வாகன்''' என்கிற '''மரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''சார்வாகன்''' என்கிற '''மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன்''' (7. செப்டம்பர் 1929 - 21 திசம்பர் 2015 ) என்பவர் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
== மருத்துவப்பணிகள் ==
இவர் தமிழகத்தின் வேலூரில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் 1954 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். [[இலண்டன்|இலண்டனில்]] திருமணம் நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். இவர் [[தொழுநோய்|தொழுநோயால்]] பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சர்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர்பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் [[பத்மசிறீ]] விருது வழங்கப்பட்டது.
 
== இலக்கிய ஆர்வம் ==
இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் கால்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது.இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.<ref>[https://azhiyasudargal.wordpress.com/2012/08/31/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9/]</ref> இவர் எழுத்துக்கள் தொகுப்பாக 40 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் '''சார்வாகன் கதைகள்''' என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியீடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சார்வாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது