'''இந்திய ஆட்சிப் பணி''' (அ)''' இ.ஆ.ப''', (''ஐ.ஏ.எஸ்'') ([[இந்தி]]: '''भारतीय प्रशासनिक सेवा''', ''பாரதீய பிரஷாசனிக் சேவா'') அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, [[இந்தியா|இந்திய]] அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் [[இந்தியக் காவல் பணி]] (அ) இ. கா. ப மற்றும் [[இந்திய வனப் பணி]] (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்]] ஆண்டுதோறும் நடத்தும் [[இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு]] மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.