சாவித்திரி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 18:
==வாழ்க்கைச் சுருக்கம்==
நடிகையர் திலகம் சாவித்திரி (கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh), (டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்றத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். பிராப்தம் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து அது தோல்வியைத் தழுவியதால் வாழ்க்கையில் நொடிந்து போனார். அதிலிருந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
சாவித்திரி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] [[குண்டூர் மாவட்டம்|குண்டூரில்]] சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்<ref>http://www.savithri.info Savithri's Profile</ref>.▼
▲சாவித்திரி
அடைக்கலம் கேட்டு வந்த சாவித்திரியை மணந்தார், ஜெமினிகணேசன்
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக ஜெமினிகணேசன் புகழ் பெற்ற அதே நேரத்தில், “நடிகையர் திலகம்” சாவித்திரியை மணந்து கொண்டார். ஆந்திராவைச் சேர்ந்தவரான சாவித்திரி சில தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு, தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.
ஜெமினியும், சாவித்திரியும் ஜோடியாக நடித்த முதல் படமான “மனம்போல் மாங்கல்யம்” வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல படங்களில் ஜோடியாக நடித்தனர். தமிழ்நாட்டின் “சிறந்த நட்சத்திர ஜோடி” என்று ஜெமினிகணேசனும் சாவித்திரியும் ரசிகர்களிடம் புகழ் பெற்றனர்.
சாவித்திரியின் மாமன் சவுத்ரி என்பவர், சாவித்திரிக்கு கார்டியனாக இருந்தார். அவருடைய அனுமதியின்றி சாவித்திரி யாருடனும் பேசக்கூட முடியாது. சாவித்திரியின் வரவு_ செலவு கணக்கையும், சவுத்திரி தன் கையில் வைத்திருந்தார்.
சாவித்திரிக்கு மேலும் மேலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சவுத்ரியின் கெடுபிடியும் அதிகமாகியது. சினிமா உலகில் நுழைவதற்கு உதவியவர் என்றாலும், தன்னை சவுத்ரி அடிமைபோல் நடத்தியது சாவித்திரிக்கு வெறுப்பை அளித்தது. இருவருக்கும் இடையே தகராறு மூண்டது.
குடும்பத்தில் யாருடைய துணையும் இன்றி தவித்த சாவித்திரி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஆதரித்து வழி காட்டக்கூடியவர் ஜெமினிகணேசன் ஒருவரே என்று எண்ணினார்.
1955_ம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று ஜெமினிகணேசன் வீட்டுக்குச் சென்றார். அதன்பின் நடந்தது பற்றி, ஜெமினிகணேசன் கூறியதாவது:-
“சாவித்திரி ஒரு நாள், வீட்டில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவதாக நினைத்து, இரவில் என் வீட்டிற்கு வந்தாள். அப்போது இருட்டு, இடி, மழை, சூறாவளி காற்று.
அடைக்கலம் நாடி வந்த பெண்ணை கோபித்துக்கொள்ளவோ, வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கவோ பாப்ஜிக்கு மனம் வரவில்லை. அந்த இரவில் வீட்டுக்குள் நுழைந்த பெண், வாழ்நாள் முழுவதும் தனக்குப் போட்டியாக வரப்போகிறாள் என்று பாப்ஜி கனவிலும் நினைக்கவில்லை.
அன்று இரவு சாவித்திரி நுழைந்தது என் வீட்டுக்குள் மட்டும் அல்ல; என் வாழ்விலும்தான். 1955 என் அதிர்ஷ்ட வருடம். எனக்கு செல்வத்தையும், புகழையும் அள்ளித்தந்தது. சாவித்திரி என் வாழ்வில் அடியெடுத்து வைத்தது அதே வருடம்தான்.
1956_ம் வருடத்தில், அபிராமபுரத்தில் 400 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் சாவித்திரியுடன் குடும்பம் நடத்தத் தொடங்கினேன். தி.நகர் அபிபுல்லா வீதியில், அடுத்தடுத்து இரண்டு 12 கிரவுண்டு நிலங்களை வாங்கிய சாவித்திரிக்கு வீடு கட்ட நானே முன்னின்று பிளான் போட்டேன்.” இவ்வாறு ஜெமினிகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
1956_ம் ஆண்டில் “பெண்ணின் பெருமை”, “ஆசை”, “பிரேம பாசம்”, “சதாரம்”, “காலம் மாறிப்போச்சு”, “தேவதா” (இந்தி கணவனே கண்கண்ட தெய்வம்), “மாதர் குல மாணிக்கம்” ஆகிய 7 படங்களில் ஜெமினி நடித்தார்.
இதில் “பெண்ணின் பெருமை” படத்துக்கு, திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. இதில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகிய மூவரும் இணைந்து நடித்தனர்.
“ராகினி பிலிம்ஸ்” பேனரில் பி.புல்லையா தயாரித்து டைரக்ட் செய்த படம் இது. வசனம் _ பாடல் தஞ்சை ராமையதாஸ். இசை: ஏ.ராமராவ். இந்தப் படத்தில் ஜெமினிகணேசன் அண்ணனாகவும், சிவாஜி கணேசன் தம்பியாகவும் நடித்தனர். ஜெமினி மன நோயாளி. வயதானாலும் சிறு குழந்தையைப்போல் நடந்து கொள்வார். சிவாஜி, கிட்டத்தட்ட ஒரு வில்லன்தான். ஜெமினியை சாவித்திரி மணந்து கொண்டு மெல்ல மெல்ல திருத்துவார்.
ஜெமினியின் பாத்திரப் படைப்பு சிறப்பாக இருந்தது. எனவே, இப்படத்தில் சிவாஜியை விட ஜெமினியின் கொடி உயரப் பறந்தது.
1940_ல், அசோக்குமார் நடித்து இந்தியில் வெளிவந்த “கிஸ்மத்” என்ற படம் வருடக்கணக்கில் ஓடிய “மெகா ஹிட்” படம். அந்தக் கதையை 16 ஆண்டுகளுக்குப்பின் நரசு ஸ்டூடியோவினர் “பிரேம பாசம்” என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். ஜெமினிகணேசன் _சாவித்திரி ஜோடியாக நடித்தனர். இது சராசரி படம்.
அரியலூர் ரெயில் விபத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “மாதர் குல மாணிக்கம்” சிறந்த படமாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்தது. இதில் ஜெமினிகணேசன், சாவித்திரி, அஞ்சலிதேவி, நாகேஸ்வரராவ், எஸ்.வி.ரங்காராவ், கண்ணாம்பா ஆகி யோர் நடித்தனர். டி.பிரகாஷ்ராவ் இதன் டைரக்டர். <ref>http://www.savithri.info Savithri's Profile</ref>.
== நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ==
|