தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 41:
| after_party = அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
}}
 
 
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஏழாவது '''சட்டமன்றத் தேர்தல் 1980''' ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] வெற்றி பெற்று, [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]]. 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
வரி 50 ⟶ 48:
 
==கட்சிகள்==
1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்படடதுகலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவு பட்டதுபிளவுபட்டது. அர்ஸ் காங்கிரசு, காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. [[மொரார்ஜி தேசாய்|மொரார்ஜி தேசாயின்]] [[ஜனதா கட்சி]], [[எஸ். ஆர். பொம்மை|எஸ். ஆர். பொம்மையின்]] ஜனதா கட்சி, [[சரண் சிங்|சரண் சிங்கின்]] ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.<ref>{{cite journal|date=26 January 1980|title=Moment of Truth for MGR|journal=[[Economic and Political Weekly]]|publisher=Economic and Political Weekly|volume=15|issue=4|pages=141–142 |url=http://www.jstor.org/pss/4368350|accessdate=15 February 2010}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக எம். ஜி. ஆரையும் கருணாநிதியையும் ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. திமுக இந்திரா காங்கிரசுடனும் அதிமுக ஜனதாக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணி அதிமுக-ஜனதா கட்சி கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பானமைதனிப்பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணியினர் அதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். இந்திரா காந்தியின் மத்திய அரசைக் கொண்டு அதிமுக ஆட்சியைஆட்சியைக் கலைத்தனர். மே 1980 இல் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுக தலைமை வகித்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா கட்சியின் பிரிவுகள் அனைத்தும் தனித்துதனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
வரி 191 ⟶ 189:
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
 
[[பகுப்பு:1980 தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1980" இலிருந்து மீள்விக்கப்பட்டது