1,214
தொகுப்புகள்
(→வரலாறு) |
|||
===வரலாற்றுப் பின்னணி===
ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் ([[பத்ரு யுத்தம்]]) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பத்ருப்போரின் மூலம் செங்கடலை அண்மிய தமது வர்த்தக மார்க்கத்தின் இழப்பீடுகளினால் வருந்திய அவர்கள், வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு நஜ்த் வழியாக ஈராக்கிற்கு வர்த்தகக் குழுவினரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டனர். இந்த வர்த்தகத்தில் ஒரு இலட்சம் திர்ஹங்கள் பெறுமதியான வர்த்தகப் பொருள்களை ஏற்றிச்செல்ல அதிகமான ஒட்டகங்களையும், அவற்றோடு செல்ல ஏராளமான கூலியாட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பினர். இந்த வர்த்தகக்குழு தொடர்பான சகல செய்திகளையும் மதீனாவில் வாழ்ந்த சில யூதர்கள் அறிந்திருந்தனர். இந்த யூதர்களின் உரையாடலைச் செவிமடுத்த மதினாவாசியான ஸைது என்பவரின் நடவடிக்கைகளையும், தலைமைத்துவத் தகைமைகளையும் அவதானித்த நபியவர்கள், அந்த வர்த்தகக்குழுவினரை மடக்க அவரது தலைமையிலேயே நூறு குதிரை வீரர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள். தண்ணீருக்காக சுராதா என்னுமிடத்தில் தங்கியிருந்த வர்த்தகக்குழுவினரை ஸைது வெற்றிகரமாகத்
===வரலாறு===
அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்து சேர்ந்த வேளை மக்காவிலிருந்து படை நகர ஆரம்பித்திருந்தது.
|
தொகுப்புகள்