துவரங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
|||
வரிசை 1:
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,601 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
விவசாயம் இவ்வூரின் முக்கிய தொழிலாகும். நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடலை,சோளம்,கரும்பு போன்றவைகளும் விளையும் மண்வளத்தைக் கொண்டுள்ளது. காவிரித்தாயின் கிளை நதியாக ஓடும் “நசுவினி ஆறு” கிராமத்தின் மிக்கிய நீர் ஆதாரமாகும். குளங்களும் குட்டிகளும் போதிய அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.{{cn}}
ஊரின் மையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும், பராசக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளது. சித்திரை திருவிழா துவரங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமாக நடைபெறும். அய்யனார் கோவில், காமாட்சி அம்மன் கோவில்,பிடாரி அம்மன் கோவில்களுக்கும் இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.
மேல்நிலைப் படிப்பிற்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை,பட்டுக்கோட்டை,காசாங்காடு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சி, தஞசாவூர், சென்னை என ஊர்களுக்கு சென்று பட்டபடிப்பும் பயில்கின்றனர்.மக்களுக்கு வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் துவரங்குறிச்சியின் கடை சந்தைகளிலையே கிடைக்கின்றன. இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ATM, இந்தியா ATM,கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மின்சார வாரியம், பொது நூலகம், அஞ்சல் நிலையங்களும் உள்ளன.
{| class="wikitable"
| நாடு|| இந்தியா
வரி 43 ⟶ 39:
|-
| ஊராட்சி மன்ற தலைவர் || A.C.தனபால் கணேசன்
|}
|