ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:NaPichchamurthy.jpg|right|thumb|ந.பிச்சமூர்த்தி]]
'''ந.பிச்சமூர்த்தி''' (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கியத்தின்இலக்கிய ஒருமுன்னோடிகளுள் முன்னோடியாகக்ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] பிதாமகர் என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றியவர்.பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறையின்அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் [http://www.chennaionline.com/education/Books/02tamil.asp நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன].
 
==வாழ்க்கை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]] மற்றும் [[மராட்டி]] மொழிகளில் [[ஹரிகதா கலாட்சேபம்]] செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
 
ந.பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பும்,படிப்பையும் கல்லூரிப் படிப்பும்படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, [[சென்னை சட்டக்கல்லூரி|சென்னை சட்டக்கல்லூரியில்]] பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
 
பிச்சமூர்த்தி, [[நவஇந்தியா(பத்திரிகை)|நவஇந்தியா]] பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவருடைய எழுத்துக்கள் [[சுதேசமித்திரன்(பத்திரிகை)|சுதேசமித்திரன்]], [[சுதந்திரச் சங்கு(பத்திரிகை)|சுதந்திரச் சங்கு]], [[தினமணி(பத்திரிகை)|தினமணி]], [[மணிக்கொடி(பத்திரிகை)|மணிக்கொடி]] போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
 
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
 
==படைப்புகள்==
வரிசை 19:
*''விஜயதசமி''
 
==சுவரஸ்யமானஆர்வமூட்டும் செய்திகள்==
* ந.பிச்சமூர்த்திக்கு அவருடைய பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.
* ந.பிச்சமூர்த்தி, [[ஸ்ரீராமானுஜர் (திரைப்படம்)|ஸ்ரீராமானுஜர்]] என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
* ந. பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு வருட காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாகதுறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு [[ரமண மகரிஷி|ரமண மகரிஷியிடமும்]] [[சித்தர் குழந்தைசாமி|சித்தர் குழந்தைசாமியிடமும்]] அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் உசிதமானதென்றுபொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.
 
==சிந்தனைசிந்தனைச் சிதறல்கள்==
* "எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
 
"https://ta.wikipedia.org/wiki/ந._பிச்சமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது