'''பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்''' (''(cosmic microwave background)'') என்பது இந்த பிரபஞ்சம் உருவாக காரனமான [[பெரு வெடிப்புக் கோட்பாடு| பெரு வெடிப்பின்]] போது உருவான [[வெப்பக் கதிர்வீசல்|வெப்பக் கதிர்வீசலின்]] எஞ்சிய வெப்பக் கதிர்வீசல் ஆகும். [[பிரபஞ்ச நுண்ணலை கதிர் இயக்கம்]] என்பது [[அண்டம் | பிரபஞ்சத்தின்]] முதன் முதலாக தோன்றிய கதிர் இயக்கம் என்பதால் [[அண்டவியல் | பிரபஞ்சவியலின்]] அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சாதரண வானியற் தொலைநோக்கியில் இரண்டு [[விண்மீன்]]கள் அல்லது இரண்டு [[விண்மீன் பேரடை]]களுக்கு இடைப்பட்ட பகுதியைப் பார்க்கும் போது இருட்டாகத் தெரியும்.ஆனால் நுண்ணுணர்வு மிக்க [[வானொலி அதிர்வெண் தொலைநோக்கி]] மூலம் பார்க்கும் போது இவைகளுக்கு இடையே ஒரு மங்கலான ஒளி இருப்பதும் இவை அனைத்துத் திசையிலும் சமமாகப் பரவியிருப்பதும் தெரிகிறது.ஆனால் இந்த ஒளி எந்த விண்மீன் அல்லது [[விண்மீன் பேரடை]]யுடனும் தொடர்பு உடையது அல்ல.
1965 லேயே ரேடியோ ஆன்டெனாவில் இந்த நுண்ணலைப் பட்டு சதா கொர் என்ற சீற்ற ஒளியை எற்படுத்துகிறது என [[ஆர்னோ பென்சியா]] மற்றும் [[ராபர்ட் வில்லன்]] இருவரும் தற்செயலாகக் கண்டுள்ளார்கள். 1978 ல் இதற்காக இவர்களுக்கு [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.