அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
ஒரு
ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே ''அசையந்தாதி'', ''சீரந்தாதி'', ''அடியந்தாதி'' எனப்படலாம்.
==எடுத்துக்காட்டுகள்==
: வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
: விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
: திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே <ref>இராஜகோபாலாச்சாரியார், கே., 1998, பக் 125.</ref>
மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.
அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
: உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
: மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
: முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
: ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
: ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
: அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
: துன்னிய மாந்தர் அஃதென்ப
: பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே<ref>தொல்காப்பியம் இளம்பூரணர் உரை., 2006, பக் 437.</ref>
மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
: முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
: இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
: மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
: நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
: ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
: ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
: ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
: எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி
==குறிப்புகள்==
* <References/>
|