பறவைக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த இன்புளுவன்சா வைரஸுக்கள் பொதுவாக இருந்தாலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் பரவுமாயின் அது வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக, வேகமாகப் பரவும்.
மேற்கூறிய பறவை சார்ந்த வைரஸுக்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், 1997ம் ஆண்டிலிருத்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் 2004 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் ஆசியாவில் '''H5N1''' வைரஸினால் பாரிய அளவிலான பறவை/கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டன. 2004ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் பாரியளவிலான தொற்றுகை ஆசியாவில் பண்ணைகளில் ஏற்பட்டன. கம்போடியா, சீனா, இந்தோனேசியா, யப்பான், லாவோஸ், தென்கொறியாதென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம், மலேசியா, துருக்கி, கஸகஸ்தான், மங்கோலியா, இரஷியாஇரசியா, ருமானியா ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன.
 
இன்புளுவன்சா வைரசுக்கள் இலகுவில் மாற்றமுறக்கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் வைரஸானது மனிதரிலிருத்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளை அல்லது பண்டமிக்கை உருவாக்கும் என்பதே உ.சு.தா.தின் எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை வைரசினால் உருவாகும் இன்புளுவன்சா கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது