'''நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ்''' (''Nikita Sergeyevich Khrushchev'', {{audio-ru|Ники́та Серге́евич Хрущёв|Ru-Nikita Sergeyevich Khrushchev.oggoga}}; [[ஏப்ரல் 17]], [[1894]] - [[செப்டம்பர் 11]], [[1971]]) [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளராக [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] மறைவை அடுத்து [[1953]] முதல் [[1964]] வரை பதவி வகித்தவர். [[1958]] முதல் [[1964]] வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை [[1964]] இல் பதவியில் இருந்து அகற்றி [[லியோனிட் பிரெஷ்னேவ்|லியோனிட் பிரெஷ்னேவை]] கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான [[கேஜிபி]]யின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.