தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
'''தமிழ்நாடு விடுதலைப்படை''' தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக [[தமிழரசன்]] இருந்தார். இது [[தமிழர்]]களுக்காக தனி [[தேசம்]] அமைக்க போராடிய [[தமிழ்த் தேசியம்|தமிழ்த்தேசிய]] அமைப்பாகும்.<ref name="நூல் 2">{{cite book | url=https://books.google.co.in/books?id=2DKJZbHxHDEC&pg=PA318&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIJDAC#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=International Security and the United States: An Encyclopedia | publisher=Greenwood Publishing Group | author=Karl R. DeRouen, Paul Bellamy | year=2008 | pages=318}}</ref> கி.பி. 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக [[இந்திய அமைதி காக்கும் படை]] இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை.<ref name="நூல் 1">{{cite book | url=https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT75&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIGzAA#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=Terrorism is Comes from Us by Barathkumar PKT | author=பரத்குமார்}}</ref> இந்த இயக்கம் சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.<ref name="satp">{{cite web | url=http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm | title=Tamil Nadu Liberation Army (TNLA) | publisher=satp.org | accessdate=29 மார்ச் 2016}}</ref> இந்திய அரசால் 2002ல் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது.
 
=== துவக்கமும் நோக்கமும் ===
தமிழ்நாடு விடுதலைப்படை (தவிப) தொடங்குவதற்கு முன்னால் பள்ளி ஆசிரியரும், இடதுசாரி இயக்கவாதியும், நக்சலைட்டு தலைவருமான புலவர் கலியப்பெருமாளே காரணமாக இருந்தார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு சுந்தரம் தலைமையில் '''தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமை''' கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக தமிழரசன் '''தமிழ்நாடு விடுதலைப்படை''' படையணியையும் உருவாக்கினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது