இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி, [[சு. திருநாவுக்கரசர்|சு. திருநாவுக்கரசரின்]] எம்ஜியார் அதிமுக, ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் ([[கோனார்|யாதவர்]] ஜாதிக் கட்சி), ஏ. சி ஷண்முகத்தின்சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ([[முதலியார்]] ஜாதிச் சங்கம்), [[தொல். திருமாவளவன்|திருமாவளவனின்]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] ([[ஆதி திராவிடர்]] ஜாதிக் கட்சி) ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் [[தமிழ் மாநில காங்கிரஸ்|தமிழ் மாநில காங்கிரசு]], [[பாமக]], [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]], [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] (சிபிஐ), [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] (சிபிஎம்), எல். சந்தானத்தின் [[பார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[வைகோ|வைகோவின்]] மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது.