வராக பெருமாள் ஆலயம் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], [[தஞ்சாவூர்]] மாவட்டத்திலுள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தின்]] மையப்பகுதியில் சக்கரபாணி, ஆதிகும்பேஸ்வரர் ஆலயங்களுக்கு மிக அருகில் அமைந்த மிகப் பழமையான ஆலயம். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய [[கரும்பாயிரம் பிள்ளையார்]] கோவிலும் உள்ளது.
[[File:Varahaperumal Temple.jpg|thumb|வராகப்பெருமாள் கோயில்]]
இக்கோயில் [[கும்பகோணம் சக்கரபாணி கோயில்|அருள்மிகு சக்கரபாணி திருக்கோயிலுக்கு]] தென்மேற்கில் அமைந்துள்ளது. வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப்பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒரு சமயம் இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்டான். இக்கொடிய செயலைக் கண்ட வானவர்கள் வைகுண்டத்தில் திருமாலை வணங்கி நிகழ்ந்ததைக் கூறிக் காப்பாற்றும்படி வேண்டினர். அசுரனால் கவரப்பெற்ற பூமியை வெளிக்கொணர வராக உருவெடுத்து பாதாளம் புகுந்து அவ்வசுரனுடன் போர் புரிந்தார். ஒரு கொம்பினால் அவனை அழித்துச் சுற்றத்தாரையும் அழித்தார். மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிக்கொண்டு மேலே வந்து பூமியை முன்போல் நிலைபெறச் செய்தார். பூமியைத் தோண்டி வெளிக்கொணர்ந்து நிலை பெறச்செய்ததைப் புலப்படுத்த பூமிதேவி தமது இடது மடியிலேயே வீற்றிருக்கும் நிலையில் மூர்த்தியாய் விளங்குகிறார். இக்கோயிலின் முக்கிய திருவிழா 12 கருடசேவையாகும். <ref> மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.</ref>
==இறைவன், இறைவி==
==மூலவர், தாயார்==
ஆதிவராக பெருமாள், அம்புஜவல்லித் தாயார்
இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் பூமிதேவி
==தீர்த்தம்==
==குடமுழுக்கு==
வராக தீர்த்தம்
2016 மகாமகத்தை முன்னிட்டு அக்டோபர் 26, 2015இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8/article3093169.ece கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015]</ref> <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/10/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/article3099542.ece கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015]</ref>
வைகுண்டத்தில் திருமாலை தருசிக்க தேவர்கள் வந்தபோது ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் திருமாலை தருசிக்க அனுமதிக்கவில்லை. வாயிலில் அமர்ந்து தியானித்து திருமாலை வேண்டினர். திருமாலும் காட்சி தந்து அருளினார். தங்களுக்கு தடையாக இருந்த துவாரபாலகர்களுக்கு பூமியில் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். அதிர்ந்து போன துவாரபாலகர்கள் திருமாலை வேண்ட சாபம் கொடுத்தது கொடுத்ததுதான். பூலோகம் செல்லுங்கள், தக்க தருனத்தில் தாமே சாப விமோசனம் அளிப்பதாக கூறி அனுப்பினார். [[ஹிரண்யட்சன்]], [[ஹிரண்யாகசிபு]] என்ற பெயருடன் பூலோகம் சென்ற அரக்கர்கள், கடும் தவம் செய்து பூமியை பாதாளாத்துக்கு கொண்டு சென்றார்கள். பூமியின் இயக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமாலிடம் முறையிட்டனர். திருமால் வராக(பன்றி)அவதாரம் கொண்டு பாதாளம் சென்று அரக்கனை அழித்து பூமாதேவியை தன் இடது தொடையில் அமர்த்தி, மாசி மாதம் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திரம் கூடிய மகாமகத்தன்று புண்ணிய தீர்த்தமான வராக குளக்கரையின் மேலே எழுந்தருளினார். இந்த இடமே வராகபெருமாள் ஆலயம். இந்த வரலாற்றை கூறும் விதமாக தன் இடது தொடையில் பூமாதேவி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இது பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் வராக பெருமாள், [[கருடாழ்வார்]], விஷ்வக்சேனர், [[நிகமாந்த மகாதேசிகர்]] ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
{{கும்பகோணம் கோயில்கள்}}
{{மகாமகம் தீர்த்தவாரி கோயில்கள்}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு==
<center>
<gallery>
File:Kumbakonam varahaperumal1.jpg
File:Kumbakonam varahaperumal2.jpg
File:Kumbakonam varahaperumal3.jpg
File:Kumbakonam varahaperumal4.jpg
File:Kumbakonam varahaperumal5.jpg
File:Kumbakonam varahaperumal6.jpg
</gallery>
</center>
[[பகுப்பு:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்]]
|