திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99, திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் பக்கத்தை [[திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோய...
No edit summary
வரிசை 55:
}}
'''திருவெள்ளியங்குடி''' தமிழ்நாட்டின் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[திருவிடைமருதூர்|திருவிடைமருதூர் வட்டத்தில்]]அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும்.<ref name="Thiruvidaimarudur Taluk - Revenue Villages">{{cite web | url=http://tnmaps.tn.nic.in/district.php?dcode=21|title=ஒரு வைணவ திருத்தலமாகும் | accessdate= [[சனவரி 1]], [[2015]]}}</ref>
இது [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] பாடற்பெற்ற [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.
வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
 
[[File: Velliyangudi_temple.jpg|thumb|200px|திருவெள்ளியங்குடி திருக்கோயில்]]
 
==தல வரலாறு==
==கோல வல்வில் ராமர் திருக்கோயில்==
நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர். வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார். இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார். பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இந்த ஒரு தலத்தை தரிசித்தால் 108திவ்வியதேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைத்து விடும்.
[[வெள்ளி]] (Planet Venus) என்பது கோளை குறிக்கும் , வெள்ளி கோளானது (வாமனாவதாரத்தில் மகாபலி தானம் செய்வதைத் தடுத்த சுக்கிரீவர்), இந்த திருத்தலத்தில் [[ராமர்|ராமரை]] வேண்டியதால் திருவெள்ளியங்குடி என்னும் பெயர் பெற்றது.<br />
இந்த தலத்தில் [[விஷ்ணு]] , சங்கு மற்றும் சக்கரம் இல்லாமல் வில்லைக் கொண்டு ராமர் கோலத்தில் இருப்பதால் , இத்திருக்கோவில் வல்வில் ராமர் கோவிலாக பெயர் பெற்றது
 
==மேற்கோள்கள்==