தக்காண சுல்தானகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
'''தக்காணத்து சுல்தானகங்கள்''' (''Deccan sultanates'') என்பன [[தென்னிந்தியா|தெற்கு]] மற்றும் நடு [[இந்தியா]]வில் ஆட்சி புரிந்த ஐந்து [[முஸ்லிம்]] பேரரசுகளைக் குறிக்கும். இவைகள் [[பீஜாப்பூர் சுல்தானகம்|பீஜாப்பூர்]], [[கொல்கொண்டா சுல்தானகம்|கொல்கொண்டா]], [[அஹமதுநகர் சுல்தானகம்|அகமதுநகர்]], [[பிடார் சுல்தானகம்|பிடார்]], [[பெரார் சுல்தானகம்|பெரார்]] ஆகியனவாகும். தக்காணத்து சுல்தானகங்கள் [[தக்காணத்துச் சமவெளி]]யில் (''Deccan Plateau''), [[கிருஷ்ணா ஆறு]] மற்றும் [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைத்தொடருக்கு]] இடையில் அமைந்திருந்தன. இவைகளில் பீஜாப்பூர், அஹ்மட்நகர், பெரார் ஆகியன [[1490]] இலும் பிடார், [[1492]] இலும் கொல்கொண்டா [[1512]] இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. [[1510]] இல் பீஜாப்பூர் [[கோவா]] நகரில் [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரின்]] ஆக்கிரமிப்பை முறியடித்தனர் ஆயினும் பின்னர் அதே ஆண்டின் இறுதியில் அந்நகரத்தை இழந்தனர்.
 
இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். [[1565]] இல் [[விஜயநகரப் பேரரசு]]க்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து [[தலைக்கோட்டை சமர்|தலைக்கோட்டை சமரில்]] தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். [[1574]] இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. [[1619]] இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் [[முகலாயப் பேரரசு]] கைப்பற்றியது. [[1596]] இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் [[1616]] க்கும் [[1636]] க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. [[கொல்கொண்டா]] மற்றும் [[பீஜாப்பூர்]] ஆகியன [[அவுரங்கசீப்]]பினால் [[1686]]-[[1687|7]] இல் கைப்பற்றப்பட்டதுகைப்பற்றப்பட்டன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தக்காண_சுல்தானகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது