பி. எஸ். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→வட்டரங்குப் பயிற்சி: விக்கியாக்கம் |
→ஜெமினியில்: சிறுமாற்றம் |
||
வரிசை 7:
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் [[வட்டரங்கு]]க் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.<ref name=இந்து/>
== திரைப்பட அறிமுகம் ==
1941-ல் வெளியான ‘மதன காமராஜன்'
▲இருந்தாலும் தனது மாணவர்களுக்கு தொடர்ந்து சர்க்கஸ் பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் [[ராசாசி]] கலந்துகொண்ட பிரம்மாண்டமான [[காங்கிரஸ்]] பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர். இந்த சாகச நிகழ்ச்சியைக் கணடு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். ராசாசி பேசும்போது சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராசாசியுடன் வந்திருந்த காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தவர். இவர் சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு ஆச்சரியப்பட்டு மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார்.<ref name=இந்து/>
▲1941-ல் வெளியான ‘மதன காமராஜன்' திரைப்படத்தில் குழுநடனம் ஆடியதன் மூலம் திரையில் முதல்முறையாகத் தோன்றினார். பின் ஜெமினியிலிருந்து வெளியேறி, ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்தார் ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடி பிரபலமானார்.<ref name=இந்து/>
== திருமணம் ==
|