தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும்இசுட்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் [[திமுக]] உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். [[1967]]-[[1968]] இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின்இசுட்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு [[கோபாலபுரம்]] இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.
=== மாநிலச் செயலாளர் ===
இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக [[1980]] இல் [[மதுரை]]யிலே உள்ள ஜான்சிராணிசான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது <ref name="thatstamilstalinf"/>. 1980 இல் [[திருச்சி]]யிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின்இசுட்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.
===சிறை செல்லல்===
ஸ்டாலின்இசுட்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். [[1975]] இல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="thatstamilstalinf"/>.