கேரளக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''கேரளக் கட்டிடக்கலை''' என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான [[கேரளா]]வில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் [[பாணி]]களோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், [[ஓடு]] என்பவற்றின் தாராள உபயோகமும், [[கூரை]]க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், [[நேபாளம்|நேபாள]], [[சீனா|சீன]] மற்றும் பல்வேறு [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]]க் [[கட்டடக்கலை]]ப் பாணிகளுக்கு
பண்டைய தமிழ் அரசுகளிலொன்றான சேர நாடான இன்றைய கேரளம், மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டிடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததின் காரணமாக கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் கட்டிடக்கலையில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே.
|