சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
== சாமிக்கண்ணு வின்சென்ட் ஓர் அறிமுகம் ==
[[File:சாமிகண்ணு வின்சென்ட்(பிள்ளை).jpg|thumb|left|தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை)தோற்றம் 18 ஏப்ரல் 1883 - மறைவு :22 ஏப்ரல் 1942]]
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' அவர்கள் 1883 ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். சாமிக்கண்ணு வின்சென்ட் தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது
[[படிமம்:மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்.jpg|thumb|left|மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்]]
[[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத் துறையின்]] முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் [[சலனப்படம்|சலனப் படங்களைத்]] திரையிடத் தொடங்கிய இவர் மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். பின்னாளில் [[கோவை|கோயமுத்தூரில்]] மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.<ref>[http://beta.thehindu.com/arts/cinema/article417856.ece He brought cinema to South]</ref><ref>[http://www.hindu.com/thehindu/mp/2007/08/30/stories/2007083051060100.htm Unsung heroes Sound bytes]</ref> தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில் இவர் பெயரில் வின்சென்ட் சாலை அமைந்துள்ளது.
|