கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
ஈடுபட்டனர்.
 
நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு எந்தக் காலகட்டத்தில் வந்து சென்றார்கள் என்பது தெளிவாக இல்லாத போதும் கி.பி. 1637ம் ஆண்டு ஒல்லாந்தர் கல்முனைக் குடாக் கடற்கரையை அடைந்தபோது, அங்கு வெண்ணிற ஆடை அணிந்த முஸ்லிம்கள் இருந்ததாக ஒல்லாந்தரின் குறிப்பொன்று கூறுகின்றது<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்</ref>. இது கி.பி. 1637ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கல்முனையில் முஸ்லிம்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு வந்து சென்றதன் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் டச்சுத்தளபதி வில்லியம் ஜாக்கபஸ் கோஸ்டர் நான்கு கப்பல்களுடன் கல்முனையில் வந்து இறங்கினான். அப்போது கண்டி அரசனாக இருந்த இரண்டாவது இராசசிங்கன் 28.03.1638 ஆம் திகதி 'கொணறுவ' என்ற இடத்தில் போர்த்துக்கேயரை தோற்கடித்து அழித்தான் என்னும் செய்தியை அறிந்து அவன் கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றான். இந்தக் குறிப்பு A History of Ceylon என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.<ref>A History of Ceylon by Fr S.G.Prera. S.J. Revised Edition, Page - 104.</ref>
 
கடற்கரைப் பள்ளிவாசல் ஏறத்தாள 400 வருடங்களுக்கு முன்னரே நாகூர் ஆண்டகை அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அப்பள்ளிவாசல் கடற்கோளினால் காவு கொள்ளப்பட்டதன் பின்பு கி.பி. 1806 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் பெரியார் முகம்மதுத் தம்பிலெவ்வை அவர்களால் தற்போதிருக்கும் தர்ஹா அமைக்கப்பட்டது.<ref>காசிம்ஜீ கண்ட கரவாகு வரலாறு.</ref> இந்தத் தர்ஹா பல முறை புனருத்தானம் செய்யப்பட்டு தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.
கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்காவில் ஆண்டு தோறும் ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 01ல் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் நாகூர் ஆண்டகை அவர்களின் புகழ்பாடி விழா கொண்டாடப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கல்முனைக்குடி_நாகூர்_ஆண்டகை_தர்ஹா" இலிருந்து மீள்விக்கப்பட்டது