மதுரை [[பாண்டியர்]]கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர நாயக்க]] ஆட்சியின் கீழ் வந்தது. [[இராமநாதபுரம்]] நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.
கி பி 1670இல் மன்னர் இரகுநாத கிழவன் சேதுபதி, இராமநாதபுர மறவ நாட்டை நிறுவினார். [[மதுரை நாயக்கர்கள்]] காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுர மறவ நாட்டை நிறுவினார். [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆங்கிலேய ஆட்சியில்]] 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சி நாடான]] இராமநாதபுர சீமை, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] காலத்தில், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவுடன்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.dinamalar.com/Tnspl_his.asp?id=286 ராமநாதபுரம் வரலாறு]</ref>