மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வடமராட்சி வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[ஆழியவளை]], [[அம்பன்]], [[செம்பியன்பற்று]], [[சுண்டிக்குளம்]], [[குடத்தனை]], [[மணல்காடு]], [[மருதங்கேணி]], [[முள்ளியான்]], [[நாகர்கோயில்]], [[பொக்கறுப்பு]], [[பொற்பதி]], [[உடுத்துறை]], [[வதிரி]], [[வெற்றிலைக்கேணி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. ஒரு சிறு பகுதி தவிர்ந்த குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள இப் பிரிவு ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ளது. இக் கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது. மேற்கில் ஒடுங்கிய நீரேரி இதனைச் [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[கிளிநொச்சி மாவட்டம்]] ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது. இதன் நீளம் குறைந்த வடக்கு எல்லையில் [[கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு]] உள்ளது.
 
இதன் பரப்பளவு 179 [[சதுர கிலோமீட்டர்]] ஆகும்<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
 
==குறிப்புக்கள்==
 
<References/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மருதங்கேணி_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது