ஸ்ரீரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
ஸ்ரீரஞ்சனி பிறந்தது [[ஆந்திரப்பிரதேசம்]], குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்காளான மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்கு படங்களில் நடித்துவந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காளுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்றபடம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்தது. இவர் நடித்த குண சுந்தரி பாத்திரத்திரம் திரைத்துறையில் இவருக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தெலுங்கு படமான குணசுந்தரி கதா படத்தை தமிழில் எடுத்தபோது குண சுந்தரி வேடத்தில் தமிழிலும் ஸ்ரீரஞ்சனியே நடித்து பாராட்டை பெற்றார். இதன் பிறகு தலைசிறந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கத்துவங்கியது. மன்றதண்டம், சங்கராந்தி, பிரேமா, ப்ரதுகு தெருவு, சுவயம்ப்ரபா, ராமாஞ்சநேய யுத்தம் போன்ற பல படங்களில் நடித்தார் என்றாலும் இவரின் குணசுந்தரி கதா பட நடிப்பு எப்போதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
இவர் நடித்த தமிழ் படமான [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]] (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. அதே ஆண்டு அவர்
1960 ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் பிறகு மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடிக்க திரும்பிவந்தார். 1974 ஆம் ஆண்டு இறந்தார்.
|