யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==தாக்குதல்==
யாழ்ப்பாண மருத்துவமனை (யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, அல்லது யாழ்ப்பாணப் பொது வைத்தியசாலை) இலங்கையின் வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டு]] மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும். இது யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ளது. ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, [[யாழ்ப்பாணம்|யாழ் நகரை]] இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர். 1987 அக்டோபர் 21 [[தீபாவளி]] விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் [[பிணவறை]]யில் வைக்கப்பட்டிருந்தன.<ref name=UTHR>{{Cite document | last1 = ஹூல்| first1 = ராஜன் | author1-link = ராஜன் ஹூல் | last2 = திரணகம| first2 = ராஜினி | author2-link = ராஜினி திரணகம | title = The Broken Palmyra, the Tamil Crisis in Sri Lanka, An Inside Account | publisher = The Sri Lanka Studies Institute | year = 1992 | id = ASIN: B000OGS3MW | pages = 265–71}}</ref>
 
==நிகழ்வுகள்==
வரிசை 32:
*பிப 1400 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
*பிப 1600 மணி - ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 - 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர். மருத்துவமனையில் இருந்து எவ்வித துவக்குச் சூடுகள் எதுவும் ஏவப்படவில்லை.
*மாலை 1620 மணி முதல் - இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர். அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப் படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர். இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.<ref name = Krishna>{{cite book | last = Krishna | first=Sankaran | title= Postcolonial Insecurities: India, Sri Lanka, and the Question of Nationhood | date= 2005 | publisher= University of Minnesota Press |isbn= 0-8166-3330-4 | pages = 190–2}}</ref><ref name= UTHR /> இன்னும் ஒருவரின் கூற்றுப் படி, இந்திய இராணுவத்தினர் [[ஊடுகதிரியல்]] அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர். 8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.<ref name =Krishna/><ref name=UTHR/>
*இரவு முழுவதும் துபாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.<ref name=UTHR/>
 
வரிசை 40:
 
==தாக்கங்கள்==
மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்து வருகிறது.<ref name=PP>{{cite book | last=Pathak | first=Saroj | title= War or Peace in Sri Lanka | date=2005 | publisher= Popular Prakashan | location = India |isbn=81-7991-199-3 | p = 122}}</ref> லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.<ref name=Ghosh>{{cite book | last=Ghosh | first=PA | title= Ethnic Conflict in Sri Lanka and Role of Indian Peace Keeping Force | date=1998 | publisher= APH Publishing |isbn=81-7648-107-6}} p.125</ref> ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தெரிவித்துள்ளன. இலங்கை அரசு இத்தாக்குதலை [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்]] என 2008 ஆம் ஆண்டில் கூறியது.<ref name = SL /> [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]], மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள்<ref name = Richardson>{{cite book | last= Richardson | first= John | title= Paradise Poisoned: Learning About Conflict, Terrorism and Development from Sri Lanka's Civil Wars | date = 2005 | publisher = International Centre for Ethnic Studies | isbn = 955-580-094-4 | page = 546}}</ref> மற்றும் பலர்<ref name= Krishna /><ref name= Dejong>{{cite book | editor-last= De Jong | editor-first= Joop | title= Trauma, War, and Violence: Public Mental Health in Socio-Cultural Context | date=2002 | publisher = Springer |isbn=0-306-46709-7 | p = 213}}</ref><ref name= Somasundaram1997>{{cite journal| last = Somasundaram | first = D | year = 1997| title = Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas | journal = Medicine, Conflict and Survival|volume = 13 | issue = 4|pages = 333–47|doi = 10.1080/13623699708409357}}</ref> இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 48:
*[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23568 20th anniversary of hospital massacre remembered in Jaffna]
*[http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2005/10/JH1021_01.jpg&width=640&height=480&caption= Pictures of the murdered staff members]
*{{cite web|url=http://www.onlanka.com/news/indian-war-crimes-in-sri-lanka-ipkf-massacre-of-tamil-doctors-and-nurses-inside-jaffna-hospital.html|title=Indian War Crimes in Sri Lanka: IPKF Massacre of Tamil Doctors and Nurses inside Jaffna Hospital |work=ONLANKA News |date= 3 பெப்ரவரி 2014| accessdate=17 சூலை 2016}}
 
[[பகுப்பு:இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்]]