தீயா வேலை செய்யணும் குமாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
}}
''தீயா வேலை செய்யனும் குமாரு'' 2013ல் வெளிவந்த காதலும் காமெடியும் கலந்து [[சுந்தர் சி.|சுந்தர்.சி]] துணை தயாரிப்பில் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் ஆகும். [[குஷ்பு |குஷ்பூ சுந்தர்]] தயாரிப்பில் [[சித்தார்த்]], [[ஹன்சிகா மோத்வானி]],[[கணேஷ்
==கதை சுருக்கம்==
குமார் (''[[சித்தார்த்]]'') கூட்டு குடும்பத்தில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். எனினும் இவருக்கு மட்டும் குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை பெண்களும், காதலும் மோசமான அனுபவத்தையே தருகின்றன. ஒருநாள் தன் அலுவலகத்தில் புதியதாக வேலைக்கு சேரும் சஞ்சனா (''[[ஹன்சிகா மோத்வானி]]'')வுடன் காதல் வயப்படுகிறார். தன் காதலை வெளிப்படுத்த தெரியாத காரணத்தினால், காதலர்களை ஈர்க்க உதவுவதன் மூலம் காசு சம்பாதிக்கும் மோகியா (''[[சந்தானம்]]'') வின் உதவியை நாடுகிறார். பெண்களிடம் உறுதியாக பேசுவதற்கு மோகியா அவருக்கு வகுப்பெடுக்கிறார். அவர் குமாரிடம் சஞ்சனா தன் பணி முதல்வரான ஜார்ஜ்யை (''[[கணேஷ் வெங்கட்ராமன்]]'') காதலிப்பதாக வதந்தியை பரப்ப சொல்கிறார். இதன் முடிவாக, ஜார்ஜுடன் நேரம் செலவழிப்பதை சஞ்சனா நிறுத்துகிறார். இதனை தன் தோழி மூலம் தெரிந்து கொண்ட ஜார்ஜ், குமார் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருவாயில் இவரும் தன் காதலை சஞ்சனாவிடம் வெளிபடுத்துகிறார். அவரும் ஒத்துக்கொள்ள, குமாரின் இதயம் நொறுங்குகிறது. பிறகு ஜார்ஜ், சஞ்சனா காதலை பிரிப்பதற்காக மோகியா களம் இறங்குகிறார். குமாரும் சஞ்சனாவும் காதலிக்க தொடங்கும் வேளையில் மோகியாவின் தங்கைதான் சஞ்சனா என தெரிய வர, இவர்கள் காதலையும் குமாரை வைத்தே பிரிக்க முயல்கிறார். குமார் சஞ்சனாவிடம் அனுதாபம் மூலம் மன்னிப்பை பெற முயல்கிறார். கடைசியில் குமாருடைய உண்மையான காதலை புரிந்து கொண்ட சஞ்சனா மோகியா ஆசியுடன் இணைகின்றனர்.
|