சுந்தரமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''சுந்தரமூர்த்தி நாயனார்''' என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் [[சமயக்குரவர்|நால்வரில்]] ஒருவரும், அறுபத்து மூன்று [[நாயன்மார்கள்|நாயன்மாரில்]] ஒருவரும் ஆவார்.<ref name=dinamalar/> இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது [[சிவபெருமான்]] கிழவனாக சென்று தடுத்தார்.<ref name=tam>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513224.htm|title=தமிழாய்வு தளம்|publisher=}}</ref> பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர்.<ref name=tam/> திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். <ref name=tam/> திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.<ref name=tam/>
 
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/news_detail.php?id=5683</ref> இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ளன. <ref name=dinamalar/> இவர் இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]] என்னும் நூலில் 63 [[நாயன்மார்]] பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
 
==சுந்தரர் தேவாரம்==
வரிசை 24:
 
==சுந்தரர் வரலாறு==
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். <ref name=tam/> இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.<ref name=tam/> நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். <ref name=dinamalar/>
 
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். <ref name=dinamalar/>
 
===தடுத்தாட்கொள்ளல்===
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத்சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை [[திருமணம்]] செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு [[ஓலைச் சுவடி|ஓலை]]யைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு [[அடிமை]] என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு [[கோயில்|கோயிலுள்]] நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். [[சிவத் தலங்கள்]] தோறும் சென்று [[தேவாரம்|தேவார]]ப் [[பதிகம்|பதிகங்கள்]] பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் [[பதிகம்]] மூலம், குண்டலூரில் தான் பெற்ற [[நெல்]]லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
 
===திருமணங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது